states

திருமலைகிரி மாரியம்மன் கோவிலில் அனைத்து சமூக மக்களும் வழிபாடு

சேலம், பிப்.3- சேலம் மாவட்டம் சேலம் ஊராட்சி ஒன்றியம் திருமலை கிரி ஊராட்சி பெரிய மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்குள் தலித் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரவீன்குமார் என்கிற இளைஞர் கோவிலுக்குச் சென் றதை தொடர்ந்து திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம் பொதுமக்கள் முன்னி லையில், ஆபாச வார்த்தைக ளால் திட்டி அவமானப்படுத்தி தாக்குதல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் மீது காவல்துறையினர் எஸ்சிஎஸ்டி பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறை யில் அடைத்தனர்.  இச்சம்பவத்தையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்டக் குழு சார்பில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, அனைத்து சமூக மக்களையும் மாவட்ட ஆட்சி யர் அழைத்துச் சென்று வழிபாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியர், திருமலைகிரி பெரிய  மாரியம்மன் கோவிலில் அனை த்து சமூக மக்களும் சென்று வழிபடலாம் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சேலம் மேற்கு வட்டாட்சியர் அடங்கிய குழு தலைமையில், அனைத்து சமூக மக்களும் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர்.  மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தலித் மக் களை அனுமதிக்க மறுத்த, சேலம்  திருமலைகிரி பெரிய மாரி யம்மன் கோவிலுக்குள், அனைத்து சமூக மக்களும், குறிப்பாக, பட்டியலின மக்கள் சென்று வழிபட உத்தரவு பிறப் பிக்கப்பட்டிருக்கிறது. சேலம் மாவட்ட ஆட்சியரின் இந்நடவ டிக்கைக்கு சிபிஎம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம்’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.