states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஜூலை 3-ஆவது வாரத்தில் மழைக்கால கூட்டத் தொடர்?

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10 வரை கூட்டம் நடைபெறும் எனத் தெரி கிறது. ஜூலை 17 அல்லது 20 ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றில் கூட்டத்தொடரைத் தொடங்க பரிந்துரை செய்ய ப்பட்டுள்ளது. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளு மன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஓரிரு  நாட்களில் தேதியை இறுதி  செய்ய உள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், தற்போ தைக்கு கூட்டம் பழைய கட்ட டத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகம்  உள்ளதாகவும் கூறப்படு கிறது.

சிபிஐ சிறப்பு இயக்குநராக அஜய் பட்நாகர் நியமனம்!

சிபிஐ கூடுதல் இயக்குந ராக இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் பட்நாகர் மத்தியப் புலனாய்வுத் துறையின் (சிபிஐ) சிறப்பு இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். இதற்கான உத் தரவை மத்தியப் பணியாளர் அமைச்சகம் பிறப்பித்துள் ளது. ஜார்கண்ட் கேடரைச் சேர்ந்த 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அஜய் பட்நாகர், தற்போது சிபிஐ கூடுதல் இயக்குநராக உள்ளார். அவரை சிபிஐ சிறப்பு இயக்குநராக நிய மனம் செய்து மத்தியப் பணி யாளர் அமைச்சகம் உத்த ரவு பிறப்பித்துள்ளது. 2024  நவம்பர் 20-ஆம் தேதி வரை அவர் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஐபிஎஸ் அதி காரிகள் மனோஜ் சஷிதர்  மற்றும் அனுராக் ஆகியோர் சிபிஐ கூடுதல் இயக்குநர் களாக நியமிக்கப்பட்டுள்ள னர். 

“பாஜக-வின் ஊழல்களை ஒன்றுவிடாமல் விசாரிப்போம்”

“பாஜக ஆட்சியில் நடந்த காவல்துறை சார்பு- ஆய்வாளர் பணிக்கான ஆட்சேர்ப்பில் நடந்த ஊழல் குறித்து சிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த  விசாரணையைத் தீவிரப் படுத்த உத்தரவிட்டுள்ளேன். சாம்ராஜ்நகரில் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2 பேர்  மட்டுமே மரணம் அடைந்த தாக அப்போதைய சுகா தாரத்துறை அமைச்சர் சுதா கர் குறிப்பிட்டார். ஆனால்  நிறைய பேர் இறந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும். 4 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டதில் நடந்த முறைகேடுகள், 40  சதவிகித கமிஷன், பிட்கா யின் முறைகேடு குறித்தும் வரிசையாக விசாரணைக்கு உத்தரவிடப்படும்” என்று கர்நாடக முதல்வர் சித்த ராமையா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

2006இல் லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற் றும் அவரது மனைவி விசா லாட்சியை விடுதலைசெய்து வேலூர் மாவட்டஅமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியு ள்ளது. அதிமுக ஆட்சியின் போது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தில்லியில் காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது : கெஜ்ரிவால்

தில்லி பிரகதி மைதான சுரங்கப்பாதை யில் வழிப்பறி கொள்ளைச் சம்பவம்  நடந்து இருக்கிறது. ஜி20 உச்சி மாநாடு இந்த சுரங்கப்பாதை அருகேதான் நடக்க  இருக்கிறது. தில்லியில் மக்கள் பாது காப்பு இல்லாத நிலை நிலவுவதாக உணர்கிறார்கள். இங்குக் காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது. தில்லி அரசின் பணிகளைத் தடுத்து நிறுத்துவதிலேயே, ஒன்றிய அரசும், துணை நிலை ஆளுநரும் தங்கள் முழு சக்தி யையும் ஈடுபடுத்துவதால்தான் தில்லியின்  தற்போதைய சட்டம், ஒழுங்கு பிரச்ச னை இப்படி ஆகி உள்ளது. ஒன்றிய அரசால் சட்டம், ஒழுங்கை கையாள முடியாவிட்டால் பொறுப்பை எங்களிடம் விடுங்கள். நாங்கள் தில்லியை நாட்டிலேயே பாதுகாப்பான நகரமாக மாற்றிக் காட்டுகிறோம்” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

வசதி இல்லாதபோது ‘வந்தே பாரத்’ எதற்கு?

“ரயில் நிலையங்களில் போதிய வசதி இல்லை. ஆனால் வந்தே பாரத் ரயில்கள் விடுவதில் மட்டும் அரசு கவனம் செலுத்துகிறது. தில்லி ரயில் நிலையத்தில் எனது மகளுக்கு முதலுதவி எதுவும் அளிக்கப்படவில்லை. எந்த ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. மருத்துவர்களோ, போலீசாரோ அங்கு இல்லை. 40 நிமிடங்கள் கழித்தே ரயில் நிலையத்தை விட்டு வெளி யேற முடிந்தது. மருத்துவமனைக்குச் செல் லும் வழியில் எனது மகள் இறந்துவிட்டாள். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்ப தாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என, தில்லி ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கிப் பலியான இளம்பெண் சாக்ஷி அகுஜாவின் தந்தை லோகேஷ் குமார் ஜோப்ரா விமர்சித்துள்ளார்.

 

உலகச் செய்திகள்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடவுளை நிந்தனை செய்ததற்காக ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு நபர்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதத்தின்போது உஸ்மான் புடா என்பவர் கடவுளுக்கு எதிராகப் பேசியதாகக் கூறப்பட்டது. அங்கிருந்த மக்கள் அவரைக் கற்களைக் கொண்டு எறிந்து கொலை செய்ததாகக் காவல்துறைத்தரப்பில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது. மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியர்ரா லியோனில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ 56 விழுக்காடு வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராகப் போட்டியிட்ட சமுரா கமுரா  41 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை குறித்து புகார்கள் எழுந்தாலும், அதிகாரப்பூர்வமான முடிவு வெளியிடப்பட்டிருக்கிறது.

இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும் வழிகள் பற்றி பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா மற்றும் அர்ஜெண்டினா ஜனாதிபதி ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள். இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் ஏற்பட்டு 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்டு மாதத்தில் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக் கெட் மூலம் சந்திரயான் 3  விண்கலம் ஜூலை 13  அன்று விண்ணில் பாய் கிறது என இஸ்ரோ அறி வித்துள்ளது. 

2022இல் இந்தியாவில் இருந்து வெளிநாடு களுக்கு உயர்கல்வி பயில சென்ற மாணவர்கள் எண்ணிக்கை 7.50 லட்ச மாக உயர்ந்துள்ளதாக வும், 2021 யை விட 2022 இல் 68% பேர் அதிகமாக வெளிநாடு சென்றதாக வும் ஒன்றிய அரசு அறிக்கை தகவல் தெரி வித்துள்ளது.