states

img

‘போலி’ வெடிகுண்டு மிரட்டல் விமான நிறுவனங்களுக்கு 9 நாட்களில் ரூ.600 கோடி இழப்பு

புதுதில்லி கடந்த 2 மாதங்களாக நாட்டில் உள்ள முக் கிய விமான நிலை யங்களுக்கு மின்னஞ்சல், செல்போன் அழைப்பு, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதள குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட் டல் வந்தது. மிரட்டல் அனைத்தும் போலியா னவை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்தது. ஆனால் கடந்த 2 வாரமாக உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் பெயரை குறிப்பிட்டு, தனித்தனியாக வெடிகுண்டு மிரட்டல் வரத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஏர் இந்தி யா, விஸ்தாரா, இண்டிகோ  உள்ளிட்ட 80 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்க ளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கள் வந்துள்ளன. இதனால் விமான நிறுவனங்கள் தயக் கத்துடன் விமானங்களை இயக்கி வருகின்றன.  விமானம் ரத்து செய்தால் ரூ.1.5  கோடி இழப்பு இந்நிலையில், வெடி குண்டு மிரட்டல் காரணமாக கடந்த 9 நாட்களில் 171 விமா னங்கள் ரத்து செய்யப் பட்டதன் மூலம் இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ.600 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய உள் நாட்டு விமான நிறுவனத்தின் நிதித்துறையில் பணி யாற்றிய பெயர் கூற விரும் பாத அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,”உள் நாட்டு விமானத்தில் இடை யூறு ஏற்பட்டு மாற்று ஏற்பாடு செய்வதற்கு கூடுதலாக சுமார் ரூ.1.5 கோடி செல வாகும். அதே சமயம் சர்வ தேச விமானத்துக்கு ரூ. 5  முதல் ரூ.5.5 கோடி வரை செலவாகும். உள்நாட்டு  மற்றும் சர்வதேச விமா னங்களுக்கு ஏற்படும் இடை யூறுகளின் சராசரி செலவு சுமார் ரூ. 3.5 கோடி ஆக உள்ளது. அதன்படி 9 நாட்களில் வெடிகுண்டு மிரட்டலால் இடையூறுகளை சந்தித்த 170க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலம் விமான நிறுவனங்களுக்கு ஏற் பட்டுள்ள நஷ்டம் சுமார் ரூ.600 கோடி ஆகும்” என அவர் கூறியுள்ளார்.