சென்னை,ஏப்.25- தமிழ்நாட்டிலுள்ள மாநில பல்கலைக்கழ கங்களில் துணை வேந்தரை தமிழக அரசே நியமித்திட பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த மசோதா மீது பேரவையில் நடை பெற்ற விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக்குழுத் தலைவர் செல்வ பெருந்தகை , ‘மறைந்த அதிமுக பொதுச் செயலாளரின் பெயரை குறிப்பிட்டு பேசினார். அப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எப்படி பெயரை சொல்லி பேசலாம் என்றனர். ஆளுநருக்கு எதிரான மசோதாவை ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியா மல் நெருக்கடிக்கு உள்ளான அதிமுக செல்வப்பெருந்தகை பேச்சை காரணமாக வைத்து பேரவையில் அமளியில் ஈடுபட்டது அப்போது அதிமுக எம்.எல்.ஏ. பாப்பி ரெட்டிப்படடி கோவிந்தசாமிக்கும், அமைச்சர் பெரியகருப்பனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சருக்கு ஆதரவாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் குரல் கொடுத்தனர்.
இருதரப்பினரும் ஆவேச மாக கைநீட்டி வாக்குவாதம் செய்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது அதிமுகவினர் பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்ட னர். ‘அத்துமீறி நடந்து கொள்ளும் அதிமுக. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற வேண்டும்’ என்று அவை முன்னவர் துரை முருகன் கேட்டுக்கொண்டார். மாசோ தாவை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று காத்திருந்த அதிமுகவினர் இதுதான நல்ல சந்தர்ப்பம் என்று கருதி பேரவையில் இருந்து ஒட்டம் பிடித்தனர். இதன் பின்னர் அமைதி திரும்பியது. எந்தந்த பல்கலைக்கழகம்? இந்த மசோதாவை அடுத்து தமிழகத்தில் மதுரை காமராஜர், சென்னை அண்ணா, கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், கொடைக்கானல் அன்னை தெரசா, காரைக்குடி அழகப்பா, நெல்லை மனோன்மணியம் சுந்ததரனார், சேலம் பெரியார், சென்னை திறந்தநிலை, வேலூர் திருவள்ளூவர், சென்னை கல்வியல் பல்கலைக்கழகம், கடலூர் அண்ணாமலை மற்றும் சென்னை பல்கலைக் கழகம் என்று 13 பல்கலைக்கழங்களின் துணை வேந்த வர்கள் இனி அரசுதான் நியமிக்கும்.