states

அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 23- வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக தேனி எம்பி., ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி தொகுதி வாக்காளர் மிலானி, தேனி  எம்பி., ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ர்ந்தார். அந்த மனுவில், “தமிழகத்தில் கடந்த 2019இல் மக்களவைத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் குமார், வாக்காளர்களுக்குப் பணப்பட்டு வாடா, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இவ்வழக்கின் தொடக்க விசாரணை யில் (கடந்த ஏப்ரல் மாதம்) தன் மீதான குற்றச் சாட்டுகள் பொய்யானவை, உள்நோக்கத்து டன் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக ரவீந்திரநாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளியன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சில விளக்கங்களை நீதிபதி கோரியிருந்தார். ஆனால்  ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பு வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்பிக்க முடியும் என கோரிக்கை வைத்தது. கோரிக்கையை ஏற்று வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் ஒப்புதல் அளித்து அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.