states

அதிமுக கடிதம்: தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை, ஜன. 1- அதிமுக தலைமையகத்திற்கு ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள் ளது. மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்து வாழும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகை யில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரத்தை தில்லியில் ஜனவரி 16இல் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவுள்ளது.  இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்குவதற்கு அழைப்பு விடுத்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. அந்த வகையில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிமுக வுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு தனித் தனி கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தை  ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திலேயே பெற்று வந்து விட்டனர்.  ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்குச் சென்றது. இந்தக் கடிதத்தை எடப்பாடி பழனி சாமி தரப்பினர் ஏற்கவில்லை. அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற ஒரு பதவி இல்லை எனக் குறிப்பிட்டு, அந்தக் கடிதத்தைத் தமிழகத் தேர்தல் அதிகாரிக்கே அதிமுக தலைமை திருப்பி அனுப்பியது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணை யம் அளித்த ஆவணங்களின் அடிப்படை யிலேயே அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலர் பதவி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடை பெற்று வரும் வழக்கில் ஜனவரி 4இல் தீர்ப்பு  வெளியாகவுள்ளது.