states

நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க வேளாண் துறை அறிவிப்பு

சென்னை, ஜூலை 26- அங்கக வேளாண்மையில் திரு நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில்  அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ‘‘நம்மாழ்வார்’’ விருதுக்கு நவ.30 வரை  விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரி வித்துள்ளது. முதல் பரிசாக, ரூ.2.50 லட்சத்துடன், ரூ.10,000 மதிப்பு டைய பதக்கமும், இரண்டாம் பரிசாக, ரூ.1.50 லட்சத்து டன், ரூ.7,000 மதிப்புடைய பதக்கமும், மூன்றாம் பரிசாக,  ரூ.1 லட்சத்துடன், ரூ.5,000 மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாகவோ அல்லது  www.tnagrisnet.tn.gov.in இணையதளம் மூல மாகவோ, தேவையான விபரங்களை அளித்து முன்பதிவு  செய்து கொள்ளலாம். பதிவுக் கட்டணமாக ரூ.100 மட்டும்  அரசுக்கணக்கில் செலுத்த வேண்டும்.