states

தீக்கதிர் விரைவு செய்திகள்

இன்று  வேளாண் பட்ஜெட்

சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு சட்டப்பேர வைக் கூட்டத் தொடர் வரு கிற ஏப்ரல் 21 வரை நடை பெறும் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரி வித்தார். 2023-24 ஆம் ஆண்டிற் கான வேளாண்மை பட்ஜெட் செவ்வாயன்று (மார்ச் 21) தாக்கல் செய்யப்படும். நிதிநிலை மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான பொது விவாதம் மார்ச் 23 அன்று துவங்கு கிறது. மார்ச் 28 செவ்வாய் கிழமை பதிலுரையுடன் நிறைவடைகிறது. அதன்தொடர்ச்சியாக, மார்ச் 29 புதன்கிழமை மானி யக் கோரிக்கைகள் மீதான விவாதமும் அமைச்சர் களின் பதிலுரையும் துவங்கு கிறது. அரசு விடுமுறை நாட் களை தவிர்த்து  14 நாட்கள் நடைபெறுகிறது. இந்த முறை காலை, மாலை இரு  வேளைகளிலும் சட்டப்பேர வை கூட்டத் தொடர் நடை பெறுகிறது என அவர் தெரி வித்தார்.

அதிமுக வெளிநடப்பு

சென்னை, மார்ச் 20- தமிழ்நாடு சட்டப்பே ரவை திங்களன்று (மார்ச் 20) காலை 10 மணிக்கு கூடியது.  2023- 2024 ஆம் ஆண்டுக் கான பட்ஜெட்டை நிதி யமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப் பாடி பழனிசாமி, ஏற்கெ னவே எழுதி எடுத்து வந்திருந்த அறிக்கையை வாசித்தார். ஆனால், பேர வைத் தலைவர் அப்பாவு அனுமதிக்கவில்லை.  இதனையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். அமளியில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்குமாறு பேரவைத் தலைவர் அறி வுறுத்தினார். மேலும், அவர் கள் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றும் தெரிவித் தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அக் கட்சி எம்எல்ஏக்கள் வெளி நடப்பு செய்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவா ளர்கள் இந்த வெளிநடப்பில் பங்கேற்கவில்லை.

மோடி வழிகாட்டுதலுடன் செயல்படுகிறார் மம்தா

காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொல்கத்தா, மார்ச் 20- மோடியின் வழிகாட்டுதலுடன் மம்தா பானர்ஜி செயல்படுகிறார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.  மேற்குவங்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திரிணாமுல் தலை வரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “ராகுல் காந்தியின் கருத்தால் நாடாளுமன்றத்தை முடக்கி  அவரை ஹீரோவாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது. தனது சொந்த நல னுக்காக பாஜக அப்படி செய்கிறது.  ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் ஹீரோவாக மாற்ற விரும்புகிறார்கள். பாஜக-வை எதிர்த்து போராட காங்கிரஸ் தவறி விட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள காவி முகாமுடன், ஒரு மறைமுகமான புரிதலுடன் காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகியவை திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக சிறுபான்மையினரை தூண்டி விடுகின்றனர்” என்று பேசினார்.  இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  காங்கிரஸ் மக்களவைக்குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மம்தா பானர்ஜி பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி யின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்து வதற்காக அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ  சோதனைகளில் இருந்து தன்னை பாது காத்துக் கொள்ள மம்தா பானர்ஜி விரும்புகிறார். அதனால், அவர் காங்கிரஸுக்கு எதிராக பேசுகிறார். இதனால் பிரதமர் மகிழ்ச்சியடைவார்” என்று சாடியுள்ளார்.

இந்தியா வந்த ஜப்பான் பிரதமர்: மோடியுடன் ஆலோசனை

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசு முறைப் பய ணமாக திங்களன்று இந்தியாவிற்கு வந்தார். தில்லி விமான நிலையத்தில் அவரை ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் வரவேற்றார். பின்னர் தில்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், தில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் இரு நாடு களைச் சேர்ந்த உயர்மட்ட குழுவினருடன் நேரடி ஆலோசனை நடத்தினர். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்தியா - வங்கதேசம் இடையே 125 கி.மீ. நீள எரிசக்தி குழாய் திறப்பு

இந்தியா- வங்கதேச நாடுகளுக்கு இடையே மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு உருவாக்கும் விதமாக ரூ.377 கோடி ரூபாய் மதிப்பில் 125 கிமீ நீள எரிவாயு குழாய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையிலான இந்த நட்புறவு குழாய் திட்டத்தை (ஐக்ஷகுஞ) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இணைந்து மெய்நிகர் முறையில் திறந்து வைத்தனர். இந்தக்குழாய் அமைப்பதற்கான அடிக்கல் 2018 செப்டம்பரில் இரு நாட்டு பிரதமர்களாலும் நாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது எல்லை தாண்டிய எரிசக்தி குழாய்த் திட்டம் ஆகும். 

நாட்டின் மொத்தக் கடன் மதிப்பு ரூ.155.8 லட்சம் கோடி!

2023 மார்ச் 31 நிலவரப்படி, ஒன்றிய அரசின் கடன் மற்றும் பொறுப்புகளின் மொத்தத் தொகை சுமார் ரூ. 155 லட்சத்து 80 ஆயிரம் கோடி எனவும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 57.3 சதவிகிதம் என்றும் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதில், தற்போதைய மாற்று விகிதத்தில் வெளிக்கடன் மதிப்பு ரூ. 7.03 லட்சம் கோடி (இது ஜிடிபி-யில் 2.6 சதவிகிதம்) என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

இராக் படையெடுப்பு தவறு அமெரிக்க மக்கள் கருத்து

வாஷிங்டன், மார்ச் 20- 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மையான அமெரிக்க மக்கள், இராக் மீது படையெடுத்தது தவறு என்று கருத்து தெரிவித்துள்ளனர். பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி 2003 ஆம் ஆண்டில் இராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. அத்தகைய ஆயுதங்கள் உலக அமைதிக்குப் பேராபத்து என்ற அமெரிக்க அரசின் பிரச்சாரம் அமெரிக்க மக்களிடம் ஆதரவைப் பெற்றுத் தந்தது. ஆனால், இன்றுவரை பேரழிவு ஆயுதங்கள் அங்கிருந்ததற்கான எந்தவித சான்றும் கிடைக்கவில்லை. கிடைக்காததால் தங்கள் நடவடிக்கை தவறு என்று இன்றுவரை அமெரிக்க அரசு தெரிவிக்கவில்லை. அந்நாட்டை சிதைக்கும் வகையில்தான் அமெரிக்கப் படையெடுப்பு இருந்தது. தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பொம்மை அரசுகளைக் கொண்டு அந்நாட்டின் எண்ணெய் வளங்களைக் கொள்ளையடித்தார்கள். தற்போது சிரியா போன்ற அண்டை நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் இராக்கில் உள்ள தங்கள் தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், கலிபோர்னியாவில் இருந்து இயங்கும் ஆக்சியோஸ்/இப்சோஸ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 61 விழுக்காடு அமெரிக்கர்கள் இராக் படையெடுப்பு தவறான நடவடிக்கை என்று கருதுவதாகத் தெரிய வந்திருக்கிறது. பத்து லட்சம் மக்களைக் கொன்ற இந்தப் போருக்கு 2003 ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு அமெரிக்கர்கள் ஆதரவு தெரிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தீக்கதிர் முக்கிய செய்திகள் 

உலகளாவிய வங்கித் துறையில் உள்ள அபாயங் கள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி யின் வட்டி விகித உயர்வு, மந்தநிலைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை திங்களன்று 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. மே மாதத்திற்கான ப்ரெண்ட் கச்சா எண் ணெய் பீப்பாய்க்கு 2.07 டாலர் குறைந்து 70.90  டாலருக்கும், ஏப்ரல் மாதத் திற்கான அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடை நிலை கச்சா ஒப்பந்தம் 1.88 டாலர் குறைந்து 64.86 டாலர் ஆக உள்ளது.

பொறியியல் முதலா மாண்டு படிக்கும் இள நிலை, முதுநிலை மாண வர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிட ப்பட்டுள்ளது. தேர்வுக் கான முழு அட்டவணை யை  http://coe1.anna univ.edu.inல் காணலாம்.

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இந்திய தூதரகம் மீது  காலிஸ்தான் ஆதர வாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போர்க் குற்றங்களைப் புரிந்தார் என்ற குற்றச்சாட்டுகளின்கீழ் 41 வயதான ஆஸ்திரேலிய ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானின் அப்பாவிக் குடிமகன் ஒருவரை அவர் கொலை செய்ததாகக் குற்றம்  சாட்டப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணை யில் ஆயுதமில்லாத 39 அப்பாவிப் பொதுமக்களை ஆஸ்திரேலிய சிறப்புப் படைகள் கொலை செய்ததாகத் தெரிய வந்திருக்கிறது.

உக்ரைனின் பகுதியாக இருந்து 2014-ஆம் ஆண்டில் ரஷ்யா வுடன் இணைக்கப்பட்ட கிரீமியா பகுதிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பயணம் மேற்கொண்டார். தங்கள் நாட்டுடன் இணைக்கப்பட்டு ஒன்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடவே அவர் அங்கு சென்றார். உக்ரைனுடனான நடவடிக்கை தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், ரஷ்ய ராணுவத்திற்கு உற்சாகம் அளிக்கவே கிரீமியாவுக்கு புடின் சென்றார் என்று கூறப்படுகிறது.

சீனாவின் முயற்சியால் ஈரானும், சவூதி அரேபியாவும் தங்கள் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முடிவு செய்தன. இரு நாடுகளும் உடன்பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டன. இதை அடுத்த  கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ராய்சிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். சவூதி அரேபியாவுக்கு ராய்சி வர வேண்டும் என்று அக்கடிதத்தில் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.