states

ஜிஎஸ்டி வரி பிரச்சனை: நடைமுறை மாற வேண்டும்

மதுரை, பிப்.1- தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உள்கட்டமைப்பு க்கு மிக அதிகமான தொகையான ரூ.10லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கும், ரயில்வே துறை திட்டங்க ளுக்கு ரூ.24லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்ப தற்கும் வேளாண்மைக்கும், உணவுப் பதனீட்டுத் தொழி லுக்கும் இந்தபட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுத்தி ருப்பதற்கும் வேளாண் உணவுத்தொழில் வர்த்தகசங்கம் நிதியமைச்சருக்குத் தனது பாராட்டுதல்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.  மறைமுகவரியான ஜி.எஸ்.டி வரி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் ஜி.எஸ்.டி கவுன்சிலில்தான் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்ற நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆண்டுக்கு ரூ.18 லட்சம் கோடிக்குமேல் ஜி.எஸ்.டி வரி யாக எந்தவித ஊதியமும் இல்லாமல் வசூலித்து செலுத்துகின்ற கோடிக்கணக்கான தொழில் வணிகத் துறை யினர் ஜி.எஸ்.டி வரிஅமலாக்கம் குறித்துத் தெரிவிக்கின்ற சிரமங்களையும், வரிமுறையை எளிமைப்படுத்துவ தற்கான ஆலோசனைகளையும் பட்ஜெட் முன் ஆலோச னைக் கூட்டங்களில் பரிசீலித்து பொருட்களுக்கான வரி வீதங்களை நிர்ணயிக்கும் முறைபோன்ற முக்கியக் கொள்கை முடிவுகளைக்  கூட பட்ஜெட்டில் அறிவிக்கப் படாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. தொழில் வணிகத் துறையினர் ஜி.எஸ்.டி குறித்த தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் எங்குமே முறையாகத் தெரிவித்து விவாதிப்பதற்கான வாய்ப்பு கள் அளிக்கப்படுவதில்லை. எனவே இந்த நடைமுறையை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம் என்று சங்கத்தின் தலைவர் எஸ்.ரத்தினவேல் கூறியுள்ளார்.