states

தீக்கதிர் விரைவு செய்திகள்

2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

சென்னை,ஏப்.15- டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஈரோட்டில்  உள்ள நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 150 இடங்க ளுடன் முதலாம் ஆண்டு சேர்க்கை  தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள் ளது.  ஈரோட்டிலிருந்து 6 கிலோ மீட்டர்  தொலைவில் பிச்சாண்டம்பாளை யத்தில் அமைந்துள்ள இந்த கல்லூரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை மாநில  தேர்வு குழுவுடன் பகிர்ந்து கொள்ளும்.  அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 150 இடங்களுக்கு நீட்-2023 மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழகம்-தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகச் சட்டம் 2019-ன் கீழ் நிறுவப்பட்டு 2021 ஆம்  ஆண்டில் சேர்க்கையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது  தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்க ளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை கே.கே.நகரிலுள்ள இ.எஸ்.ஐ.சி. மருத்துவ கல்லூரிக்கு இடங்களை உயர்த்தியும் அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ். ‘சீட்’கள்  கிடைக்கும். இதன் மூலம் மொத்தம் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை  11,575-ஆக உயர்ந்து உள்ளது. தமிழ் நாட்டில் மொத்த மருத்துவ கல்லூரி  எண்ணிக்கை 74-ஆக அதிகரித்துள் ளது.

நலிவடைந்தோருக்கு 30 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை,ஏப்.15- பொருளாதாரத்தில் நலிவடைந்த வர்களுக்கு 30 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று பேரவையில் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய  மானியக் கோரிக்கை மீது நடந்த விவா தங்களுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்து பேசி னார். அப்போது, “ நகர்ப்புற ஏழைகள்  நெருக்கமாக வாழும் ஆட்சேபணை யற்ற நிலங்களில் அவர்தம் வாழு மிடங்களில் சாத்தியமான தளப்பரப்பு குறியீட்டின் அடிப்படையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, அக்குடியிருப்புகள் அப்பகுதியில் முன்னர் வாழ்ந்த குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது”என்றார். தமிழ்நாட்டில் நிலம் வைத்திருக் கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் வீடு கட்டுவதற்காக அரசு சார்பில் ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. அத்திட்டத்தின் கீழ்  நிகழ் நிதியாண்டில் 1.10 லட்சம் தனி  வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் அவர் கூறினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் ஏழை  - எளிய குடும்பத்தினருக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு தகுதியின் அடிப்படையில் அவை ஒதுக் கீடு செய்யப்படுகின்றன. அந்த வகை யில் மேலும் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் கீழ் உள்ள குடியிருப்புகளின் பராமரிப்புப் பணிகளை சிறந்த முறை யில் மேற்கொள்ளும் குடியிருப்போர் நல சங்கங்களுக்கு தர வரிசை அடிப் படையில் முறையே ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை அளிக்கப்படும். வாழ்விட மேம்பாட்டு வாரியப் பகுதிகளில் வசிக் கும் 12 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன்  மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கி வேலை வாய்ப்புக்கு வகை செய்யப்படும் என்றும் அமைச்சர் அன்பரசன் தெரி வித்தார்.

தமிழ்நாட்டுக்கு 6.25 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தேவை: ஒன்றிய அரசுக்கு பொது சுகாதாரத் துறை கடிதம்

சென்னை, ஏப்.15- தமிழ்நாட்டிற்கு 6.25 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தேவை என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியிருக்கிறது. ஒன்றிய சுகாதாரத் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் வீணா  தவணுக்கு, தமிழ்நாடு பொது  சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் படி, தமிழ்நாட்டில் 2021, ஜனவரி  16 முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 38 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.  18 வயதைக் கடந்த 97.89 விழுக் காட்டினருக்கு முதல் தவணையும், 92.47 விழுக்காட்டினருக்கு2-ம்  தவணையும் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணையை (பூஸ்டர்) பொருத்த வரை 17.04 விழுக்காட்டினர் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசுத்  தரப்பிலிருந்து இதுவரை 11.93  கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட் டுள்ளன. கோவிஷீல்ட் 9.29 கோடி,  கோவேக்சின் 2.18 கோடி, கோர்பி வேக்ஸ் தடுப்பூசி 45.20 லட்சம் தவ ணைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.  தமிழ்நாட்டில் தற்போது எந்த வகை கொரோனா தடுப்பூசியும் கையிருப்பில் இல்லை. அதே வேளையில், இன்னமும் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் தவணையும், 86 லட்சத்துக் கும் அதிகமானோர் இரண்டாம் தவணையும், 4.42 கோடி பேர் முன்னெச்சரிக்கை தவணையும் செலுத்திக் கொள்ளாமல் உள்ள னர்.  அதைக் கருத்தில் கொண்டு, காலாவதி காலம் அதிகமுள்ள 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி களையும், 50 ஆயிரம் கோவேக்சின்  தடுப்பூசிகளையும், 75,000 கோர்பி வேக்ஸ் தடுப்பூசிகளையும் விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தனி நாணயத்தை பிரிக்ஸ் உருவாக்கலாமே?

லூலா ஆலோசனை பெய்ஜிங், ஏப்.15- பிரேசில் மற்றும் சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகளுக்கு இடையில் நிதி மற்றும் வர்த்தக உறவுகளுக்காக பிரிக்ஸ் போன்ற வங்கி ஒரு நாணயத்தை உருவாக்கலாம் என்று பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா ஆலோசனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள லூலா, சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். பிரிக்ஸ் வங்கியின் தலைவராக பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி டில்மா ரூசெப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி யிலும் பங்கேற்றார். பிற நாடுகளு டனான வர்த்தகத்தில் டாலரை நம்பியி ருப்பதைக் குறைப்பது பற்றி அனைவ ரும் முயற்சிக்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், “சர்வதேச அளவிலான பிரச்சனைகளில் முடிவெடுக்கும் இடத்தில் பிரேசில் இல்லை என்பது கடந்த காலமாகிவிட்டது. சர்வதேச அரங்கில் மீண்டும் தனது பாத்திரத்தை வகிக்க பிரேசில் தொடங்கிவிட்டது. பொது முதலீடுகளை வெட்ட வேண்டும் என்ற ஐ.எம்.எப். நிபந்தனைகள் பல நாடு களை மூச்சுத் திணற வைத்து விட்டன. தற்போது அர்ஜெண்டினா திணறுகிறது. முன்பு பிரேசிலுக்கும் இந்த நிலைமை இருந்தது” என்று குறிப்பிட்டார். சீனாவுடனான இருபதுக்கும் மேற்பட்ட உடன்பாடுகளில் லூலா கையெழுத்திடவிருக்கிறார். நிதி மற்றும் வர்த்தகப் பரிமாற்றங்களில் அமெரிக்க டாலருக்குப் பதிலாக உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான உடன்பாடும் அதில் ஒன்றாகும். டாலரற்ற சர்வதேச வர்த்தகத்தை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு குறித்து லூலா கருத்து தெரிவித்திருக்கிறார்.

2024-இல் இடதுசாரிகளின் பக்கமே நிற்கப் போகிறேன்: தேவகவுடா

2024-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் பக்கம் நிற்கப் போவதாக முன்னாள் பிர தமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். “வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நான் இடதுசாரி கட்சிகள் பக்கம் நிற்கப் போகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்வதை பரிசீலிக்கும்படி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக வும், விரைவில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு போகும்போது அதுவே முதல் சிறந்த விஷயமாக இருக்கவேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளதாகவும் தேவகவுடா குறிப்பிட்டுள்ளார்.

கனவுகளுக்கு மொழி தடையாக இருக்கக் கூடாது: பிரதமர் மோடி 

ஆயுதப் படை ஆட்சேர்ப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF) தேர்வு நடத்தப்படுகிறது. இந்தி மற்றும் ஆங்கி லம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்த தேர்வு, தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு காரணமாக, இந்தி,  ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக்கூடாது” என்றும், “அதற்கான எங்களது பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதிதான் இது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மோடிக்கு ரூ. 1000 கோடி தந்தேன் என்றால் அவரை கைது செய்வீர்களா?

மதுபானக் கொள்கை வழக்கில், தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், “கடந்த செப்டம்பர் 17 அன்று இரவு 7 மணிக்கு பிரதமர் மோடிக்கு 1,000 கோடி ரூபாய் கொடுத்தேன் என ஆதாரம் இல்லாமல் நான் கூறினால், அவரை கைது செய்வீர்களா?” என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் “நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்துகிறார்கள்” என்றும், “பொய்யான தகவல் கூறுதல் மற்றும் பொய்யான ஆதாரம் கொடுத்ததற்காக விசாரணை அமைப்புகள் மீது வழக்கு தொடரு வேன்” என்றும் கூறியிருக்கும் கெஜ்ரிவால், ஞாயிறன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.