states

25,000 பேருக்கு உதவித்தொகை: மாற்றுத்திறனாளிகள் சங்க போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை, ஜன. 24 - காத்திருக்கும் மாற்றுத்திறனாளிக ளுக்கு உதவித் தொகை வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு பராமரிப்பு உதவித்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகையை கேட்டு தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாக காத்து கிடக்கின்றனர். உதவித் தொகையை விரைந்து வழங்கக் கோரி ஜன.24 அன்று தமிழகம் முழுவதும் மனு கொடுக்கும்  ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கம் அழைப்பு விடுத் திருந்தது. இந்நிலையில், மாற்றுத்திறனாளி கள் நலத்துறை, உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கி, அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இது குறித்து சங்கத்தின் மாநிலத்  தலைவர் டி.வில்சன், பொதுச்செய லாளர் பா. ஜான்சிராணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்குவதற்கான நிதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டு விட்டது. இந்தப் பணி குடியரசு  தினத்துக்கு பிறகு துவங்கி பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்குள் உதவித் தொகை வழங்கப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜேசிந்தா லாசரஸ் சங்கத்தின் பொதுச் செயலாளரிடம் தெரிவித்துள்ளார். காத்திருப்போர் பட்டியலில் உள்ள சிலர் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக வழங்கா மல் உள்ளனர். அத்தகையோர் முழு  தகவலையும் வழங்கினால், ஜனவரி  - பிப்ரவரி மாதத்திற்கான உதவித் தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கான ஆணையையும் வெளியிட்டுள்ளார். எனவே, ஜன.24 அன்று நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு வேண்டுகோள்

75 விழுக்காட்டிற்கு மேல் கடும்  உடல் பாதிக்கப்பட்டவர்கள், மன வளர்ச்சி குன்றியோர், முதுகு தண்டு வடம், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு, நாட்பட்ட நரம்பியல் பாதிப்பு,  தசைச்சிதைவு ஆகிய நோய்கள் மற்றும் தொழுநோயால் பாதிப்படைந் தோர் என 24 ஆயிரத்து 951 பேர்  உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து  காத்திருக்கின்றனர். இவர்களுக்கு உதவித் தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத் துறை யின் கீழ் பயன்பெறும் அனைத்து பயனாளிகளும் தங்களுடைய பெயருடன் ஆதார் எண், முகவரி, குறை பாட்டின் தன்மை மற்றும் விழுக்காடு அளவு, தேசிய அடையாள அட்டை எண்,  வங்கி கணக்கு எண் மற்றும் தொலை பேசி எண்களை அந்தந்த மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவல கத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு செய்திக் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.