states

உ.பி.யில் காவல் நிலையத்திற்குள்ளேயே மோதிக்கொண்ட சுரங்க ‘மாபியா’-க்கள்!

மெயின்புரி, மே 16 - உத்தரப் பிரதேசத்தில் முதல்வ ராக இருக்கும் ஆதித்யநாத், என் கவுண்ட்டர் மூலம் சமூகவிரோதி களைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், நாட்டிலேயே சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில் உ.பி.தான் முதலிடத்தில் இருப்பதாகவும் பாஜக-வினர் தொடர்ந்து ஜம்பம் அடித்து வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில், காவல் நிலையத்திற்கு உள்ளேயே சுரங்க மாபியாக்கள் மோதிக் கொண்ட  சம்பவம் நடந்துள்ளது. சுரங்க மாபியாவைச் சேர்ந்த அனுஜ் குமார், விபின் குமார் என்ற இரண்டு டிராக்டர் ஓட்டுநர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும், மெயின்புரி மாவட்டம் ஆஞ்சா கேட் காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரு தரப்பிற்கும் இடையே பிரச்சனை இருந்த நிலையில், போலீசார் அவர் களிடம் கட்டப்பஞ்சாயத்து மூலம் சமாதானப் பேச்சில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், சமாதானமாகாத அவர்கள், சினிமாவில் காட்டப்படு வதைப் போல காவல்நிலையத்திற்கு உள்ளேயே அடிதடியில் இறங்கியுள்ள னர். இரண்டு கும்பலாக பிரிந்து ஒரு வருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். போலீசார் அவர்களின் சண்டையை விலக்கி விட முயன்றும் முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் வீடியோவாக, சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளன. சமூக விரோதிகள், காவல் நிலையத்திற்கு உள்ளேயே மோதிக் கொள்வதுதான் ஆதித்யநாத் அரசு சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் லட் சணமா? என்று பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தற்போது, இந்த விவகாரத்தில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. அவர்களில் 4 பேர் மீது பிரிவு  191-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.