நாகர்கோவில், நவ.22- சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்.ஒன். விண்கலம் தயா ராகி வருகிறது. அடுத்த ஆண்டு அது விண்ணில் செலுத்த திட்டமி டப்பட்டுள்ளது. சாதாரண ஆர்பிட் போல் அல்லாமல் லிபரேஷன் பாயிண்ட் ஒன்று வைத்து அங்கு செயற்கைகோளை செலுத்தி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள் ளது. அது சூரியனை ஆய்வு செய் யும் என இஸ்ரோ முன்னாள் தலை வரும், விக்ரம் சாராபாய் விண் வெளி ஆய்வு மைய ஆலோசகரு மான சிவன் கூறினார். செவ்வாயன்று (நவ.22) நாகர் கோவில் வந்த சிவன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது: இஸ்ரோவில் வரும் சனிக் கிழமை பி.எஸ்.எல்.வி. சி4 என்ற 54-ஆவது பி.எஸ்.எல்வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கி றது. அதில் கடல் ஆய்வுக்கான செயற்கைக்கோளும், 8 வணிக ரீதியான செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட உள்ளன. அதன்பிறகு அடுத்த கட்டமாக எஸ்.எஸ்.எல்.வி. செயற்கை கோள் செலுத்தப்பட இருக்கிறது. ஆதித்யா எல்.ஒன். மற்றும் ககன்யான் செயற்கைக் கோள் போன்றவைகள் செலுத்தப் பட இருக்கின்றன. நிலவுக்கு மனி தனை அனுப்பும் ககன்யான் விண் கலம் செலுத்துவதற்கு முன்பு பல் வேறு கட்ட சோதனை ராக்கெட்டு கள் செலுத்தப்பட வேண்டி இருக்கி றது.
ககன்யான் விண்கலம் செலுத்து வதற்கு முன்பு 2 முக்கிய கார ணங்களை கவனிக்க வேண்டி யிருக்கிறது. ககன்யான் ராக்கெட் டில் செல்லும் மனிதர்களின் பாது காப்பு குறித்து கவனிக்க வேண்டும். அதற்கு தகுந்த வகையில் ராக் கெட் உருவாக்கப்பட வேண்டும். விண்ணில் அவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதா வது பூமியில் இருப்பது போன்ற நிலையை அங்கு உருவாக்க வேண் டும். இதுதொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதைப் போன்று மனிதர்கள் விண்ணில் செல்லும்போது ஏதாவது அசம்பா விதங்கள் நடந்தால் உடனே அவர் கள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து தனியாக பூமியில் வந்து இறங்கும் வகையில் சோதனைகள் நடத்தப் பட வேண்டி உள்ளது.
இதைத் தொடர்ந்து ரோபோ வை விண்ணிற்கு அனுப்பும் சோதனை நடைபெறும். அது வெற்றி கரமாக நடைபெற்ற பிறகு அது பாதுகாப்பான பயணமா என்பது உறுதி செய்யப்படும். பின்னர் ககன் யானில் மனிதனை அனுப்பும் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது ககன்யான் விண்கலம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அந்த சோதனைகள் அனைத்தும் இதுவரையிலும் வெற்றி பெற்றுள்ளன. குலசேக ரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில ஆர்ஜிதப் பணிகள் முடிவடைந்துவிட்டன. கட்டுமான பணிகள் அங்கு துவக் கப்பட வேண்டி உள்ளது. அதற்கு முன்னதாக அங்கு மண் பரிசோத னைகள் நடத்தப்பட வேண்டும். செயற்கைக்கோள் செலுத்தும் போது அதன் நிலையை அந்த பகுதி தாங்குமா என்பது குறித்து ஆய்வு கள் நடத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இதற்கான கட்டுமான பணி கள் தொடங்கும் என அவர் கூறி னார்.