தில்லியில் அதிஷி, பரத்வாஜ் அமைச்சர்களாக பதவியேற்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயி னும், மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா வும் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், புதிய அமைச்சர்களாக சவுரப் பரத்வாஜ் (43) மற்றும் அதிஷி மர்லினா (41) ஆகியோர் வியாழனன்று பதவியேற்றுக் கொண்டனர். அதிஷி மர்லினாவுக்கு கல்வி, பொதுப்பணித்துறை, மின்சாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளும், பரத்வாஜுக்கு சுகாதாரம், நீர்வளம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் தொழிற்சாலைகள் ஆகிய துறைகளும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.
நாகாலாந்து மாநில பிரிவைக் கலைத்த ஐக்கிய ஜனதாதளம்
நாகாலாந்தில் என்டிபிபி - பாஜக கூட்டணி 37 இடங்களில் வென்று முதல்வராக நெய்பியூ ரியோ பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் அம்மாநிலத்தில் வெற்றிபெற்ற தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், குடியரசுக் கட்சி (அத்வாலே), எல்ஜேபி போன்ற பல கட்சிகளும் அம்மாநில அரசுக்கு ஆதரவளித்ததால், அங்கே எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றம் அமைந் துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மத்திய தலைமையுடன் கலந்தாலோ சிக்காமல், என்டிபிபி- பாஜக கூட்டணி அரசை ஆதரித்ததற்காக, ஐக்கிய ஜனதாதளத்தின் நாகா லந்து மாநில பிரிவு கூண்டோடு கலைக்கப்படுவதாக, ஜேடியு பொதுச்செயலாளர் அபாக் அகமது கான் அறிவித்துள்ளார்.
ஆளும் திமிரோடு பேசக்கூடாது: அதிமுக கண்டனம்
சென்னை, மார்ச் 9- பாஜகவிலிருந்து முக்கிய நிர்வாகி கள் சமீபத்தில் வெளியேறி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்தனர். இது தொடர்பாக இரு கட்சி தலை வர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள் ளனர். பாஜகவிலிருந்து விலகியவர் களை கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவில் சேர்த்துக் கொண்டதைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பாஜகவில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது என்றும் அண்ணாமலை கூறினார். இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:- அதிமுகவிலிருந்து சென்ற வர்களை பாஜகவில் சேர்த்தபோது இனித்தது. இப்போது அங்கே இருந்து இங்கே வரும்போது கசக்கிறதா? பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும், வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. ஒன்றியத்தில் ஆளும் திமிரோடு பேசக் கூடாது. கூட்டணி கட்சிகள் தோளில் ஏறி உட்கார்ந்து காதை கடிப்பதை யெல்லாம் அதிமுக பொறுத்துக் கொண்டிருக்காது. எடப்பாடி பழனி சாமியின் உருவப்படத்தை எரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டார் கள். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.
புதிய வளம் கண்டுபிடிப்பு
வின்தோக், மார்ச் 9- நமீபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான நாம்கோர் மூன்றாவது புதிய எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென் பகுதியில் உள்ள நமீபியாவில் அண்மைக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் எண்ணெய் வளம் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணெய் வளத்தைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த நமீபியா, சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் உடன்பாடு கண்டு, அந்தப் பணியில் இறங்கியது. ஏராளமான எண்ணெய் வளம் நமீபியக் கடற்பகுதிகளில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. கிடைக்கப் போகும் வளங்கள் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பலன் தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு எண்ணெய் நிறுவனமான நாம்கோர் இந்தப் பணியில் ஈடுபட்டது. தொழில்நுட்ப உதவியை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாகப் பெற்றுக் கொண்டனர். ஏற்கனவே இரண்டு இடங்களில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டறிந்த நாம்கோர் தற்போது மூன்றாவது பெரிய வளத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த எண்ணெய் வளத்தைப் பயன்படுத்துவதில் நாம்கோரின் பங்கு குறைவாக இருப்பதால், அதை உயர்த்துவதற்கான முயற்சியையும் செய்து வருகிறார்கள். இத்தகைய வளங்கள் நமீபியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்றும், ஆப்பிரிக்காவில் மேலும் வளங்கள் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளையும் அதிகப்படுத்தும் என்றும் நாம்கோர் நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
2024-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட அனைத்தையும் நாங்கள் செய்வோம்!
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேச்சு
மும்பை, மார்ச் 9 - 2024 மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடி அரசை அகற்ற அனை த்தையும் செய்வோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள் ளார். “எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் பாஜக-வுக்கு எதிராக போராடுவதாகவும், பிரதமர் பதவிக்கான எதிர்க்கட்சியின் முகமாகவும் அவரைப் பார்க்க முடியும்” என்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் பேசி யிருந்தார். இந்நிலையில், ராவத் பேசியது குறித்து, கருத்து தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, “நான் பிரதமர் பதவி பற்றி கனவு காணவில்லை; ஆனால் 2024-இல் ஒரு மாற்றத்தைகொண்டு வர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘கஸ்பா பெத்’ சட்டப்பேர வைத் தொகுதி இடைத்தேர்தலில் மகா விகாஸ் அகாதி கூட்டணி வேட்பாளரின் வெற்றி, (எதிர்க்கட்சிகள்) ஒன்று பட்டால் பாஜக-வுக்கு எதிராக வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள் ளது. மத்திய விசாரணை அமைப்பு களின் முறைகேடு குறித்து பிரத மருக்கு கடிதம் எழுதியுள்ளோம். எதிர்க் கட்சித் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. மத்திய அமைப்பு களின் தொடர்ச்சியான தவறான பயன்பாடு நிறுத்தப்படவில்லை. இது ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையாக இருந்தது. தங் களை தோற்கடிக்க முடியாது என்று அவர்கள் (காங்கிரஸ்) நினைத்தார்கள். ஆனால், அவர்கள் தோல்வியை எதிர்கொண்டார்கள், இப்போது பாஜக- வுக்கும் அதே நிலைதான் ஏற்படும். அவர்களும் (பாஜக) வீழ்வார்கள் மற்றும் தோற்கடிக்கப்படுவார்கள்” என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள் ளார்.