சென்னை, ஜூலை 19- மலைப்புலையன், வேட்டைக் காரன் பழங்குடியின மக்களை பழங் குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும். ஆதியன் பழங்குடி இன மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கு வதை விரைவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பழங்குடியினர் இனச்சான்றிதழ் வழங்குவதில் உள்ள ஆன்லைன் முறையை ரத்து செய்து, பழைய முறைப்படியே நேரில் விண்ணப்பித்திடும் முறை யை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மை செயலா ளரிடம் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு, மாநில துணைத் தலை வர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்கண்ணன் ஆகியோர் மனு அளித்தனர். முதன்மைச் செயலாளரிடம் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு அளித்த மனுக்கள் வருமாறு: தமிழ்நாட்டில் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, பழங்குடியினர் பட் டியலில் புலையன் பழங்குடியினத் தவர்கள் இருந்து வந்தனர். பின்னர் கடந்த 1975 ஆம் ஆண்டு களில் மலைப்புலையன், வேட்டைக் காரன் இனத்தவர்களை பழங்குடி கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்ட னர். அதன் பின்னர் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மற்றும் பல்வேறு பழங்குடியின அமைப்புகள் பல ஆண்டுகாலமாக நீண்டபோராட்டங் கள் நடத்தியும், சட்டமன்றத்தில் வலி யுறுத்தி பேசியதின் விளைவாக தமிழ்நாடு அரசு, மாநில பழங்குடி யினர் ஆராய்ச்சி மையத்தின் இயக்கு நர் தலைமையில் இது குறித்து கள ஆய்வு செய்து, 2013 ஆம் ஆண்டு மலைப்புலையன் மக்கள் வசித்து வருவதை உறுதி செய்து பரிந்துரை செய்துள்ளது. கடந்த 10 ஆண்டு காலமாக இப்பரிந்துரை நிலுவை யில் உள்ளது. அதே போல், வேட்டைக்காரன் இன பழங்குடி மக்களை பழங்குடி யினர் பட்டியலில் சேர்த்திடக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நீண்ட பல போராட்டங் களுக்கு பிறகு, கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பாக மாநில பழங்குடி ஆராய்ச்சி மைய இயக்குநர் தலைமையில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு செய்து வேட்டைக்காரன் பழங்குடி மக்க ளை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பது குறித்தான பரிந்துரை யும் அளித்துள்ளார். தமிழ்நாடு அர சாங்கமும் வேட்டைக்காரன் பழங்குடி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்படுமென்று அறிவித்துள்ளது. எனவே முதன்மைச் செயலாளர், மலைப்புலையன், வேட்டைக்காரன் இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக் களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட துரித நடவடிக்கை களை மேற்கொண்டு பழங்குடியி னர் பட்டியலில் இணைத்திட வேண்டும்.
ஆதியன் பழங்குடி மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்குவதை விரைவுப்படுத்துக!
தமிழ்நாட்டில் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஆதியன் பழங்குடியினத்தவர் பல்லாயிரக் கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான ஆதியன் பழங்குடி இனச்சான்று, மன்னார்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, கும்பகோணம், கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற வருவாய் கோட்டங்களில் கடந்த 20 ஆண்டுகாலமாக இனச்சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஏற்கனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், உயர் செயலாளர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளது.இருப்பினும் இனச்சான்று வழங்கிடாமல் இழுத்தடிக்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இனச்சான்று இல்லாததால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேற்கண்ட வருவாய் கோட்டாட்சி யர்களுக்கு ஆதியன் பழங்குடியினச்சான்று வழங்கிட ஆவணசெய்திடவேண்டும்.