சென்னை, ஜூன் 21- கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குழந்தை களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத்தை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள் ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், “ கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர் களின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டும், ஏற்கனவே அறிவிக்கப் பட்ட 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி யுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுத லாக வழங்கப்படும். பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழ ந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்ட ணம் உள்ளிட்ட அனைத்து செலவினங் களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும். (மேசையைத் தட்டும்ஒலி) பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ் வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பரா மரிப்புத் தொகையாக தலா ஐந்தா யிரம் ரூபாய் வழங்கப்படும். (மேசை யைத் தட்டும் ஒலி) பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவா ரணத் தொகையாக அவர்களின் பெய ரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முத லமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகை யில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்குவழங்கப்படும். பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் அரசு மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க வும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள வும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதி யரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆணை யம், இதுகுறித்து முழுமையாக விசாரித்து, தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும். அதனடிப்படையில் இந்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.” இவ்வாறு முதல்வர் கூறினார்.