புதுதில்லி, பிப். 16 - அதானி குழுமத்தின் மீதான ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து விசார ணை நடத்தக் கோரி ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India - RBI) ஆளு நர் சக்திகாந்த தாஸ் மற்றும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ (SEBI)-யின் தலைவர் மாதபி பூரி புச் ஆகியோருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார். ரிசர்வ் வங்கிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 1. இந்திய வங்கி அமை ப்பில் அதானியின் உண்மையான கடன் விவரங்கள் என்ன? 2. அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிதி குறைந்தால் இந்திய வங்கிகளால் பிணை எடுக்கப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ள வெளிப்படை யான மற்றும் மறைமுகமான உத்தர வாதங்கள் என்ன?” என்று கேட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், இந்த 2 அம்சங் களை கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி “நிதி ஸ்திரத் தன்மைக்கான அபாயங்களை விசாரித்து, அது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல ‘செபி’ தலை வருக்கு எழுதிய கடிதத்தில், “அதானி குழும விவகாரத்தில் நியாயமான, முழுமையான, எந்த தயக்கமும் இல்லாத விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். “அவ்வாறு செய்யத் தவறி னால், இந்திய நிறுவன நிர்வாகத்தின் மீதும், இந்தியாவின் நிதி கட்டுப்பாட் டாளர்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும், மேலும் உலகளவில் நிதி திரட்டும் நமது திறனையும் பாதிக்கும்” என்று சுட்டிக் காட்டி யுள்ளார். “30 கோடி இந்தியர்கள் தங்களு டைய வாழ்நாள் சேமிப்பென நம்பிக்கை கொண்டுள்ள எல்ஐசி, சமீபத்திய நாட்களில் அதானி குழுமப் பங்குகளில் ஆயிரக்கணக் கான கோடிகளை இழந்துள்ளது. இதுபோன்ற பொதுத்துறை நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீடு களில் தங்கள் தனியார் துறை நிறு வனங்களை விட பழமைவாதமாக இருப்பதையும், மேலிடத்தின் அழுத் தத்திலிருந்து விடுபடுவதையும் நாம் உறுதி செய்ய வேண்டியுள்ளது” என்று கூறியிருக்கும் ஜெய்ராம் ரமேஷ், எல்ஐசி-யும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் எதற்காக, அதானி குழுமத்தின் பங்குகளை அதிகமாக வாங்கியுள்ளன? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.