புதுதில்லி, மார்ச் 3 - தெலுங்கானா சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கா மல் இருக்கும் ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் மீது, சந்திரசேகர ராவ் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக தெலுங்கானா தலைமை செயலாளர் ஏ. சாந்திகுமார் சார்பில் வழக்கறிஞர் உதய்குமார் சாகர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதில் ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதாவுக்கு மட்டும் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளார். ஏனைய 7 மசோதாக்கள் மற்றும் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் நடைபெற்ற 3 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
அதாவது, தெலுங்கானா பல்கலைக்கழ கங்களின் கூட்டு நியமன வாரிய மசோதா, முலுகு வில் உள்ள வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை வனவியல் பல்கலைக் கழகமாக மாற்றும் மசோதா, அசாமாபாத் தொழில்துறை சட்ட மசோதா, நகராட்சி விதி முறைகள் சட்டத் திருத்த மசோதா, பொதுப் பணியாளர்கள் சட்டம், தனியார் பல்கலைக்கழ கங்கள் சட்டத்திருத்த மசோதா, மோட்டார் வாகனங்கள் மீதான வரி சட்டத்திருத்த மசோதா, நகராட்சி விதிமுறைகள் மசோதா, பஞ்சாயத்து சட்ட மசோதா மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா ஆகிய 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மசோதாக்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கி நிலுவை யில் இருந்து வருகின்றன. இந்நிலையில், அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறி ஆளுநர் நடந்து கொள்வது வழக்கத்துக்கு மாறான, சட்டவிரோதமான, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறி விக்க வேண்டும். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெலுங்கானா அரசின் மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவில், ஆளுநரின் செயலாளர் மற்றும் ஒன்றிய சட்டத்துறையின் செயலாளர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.