states

வேலையின்மையும், காலநிலை மாற்றமும் முக்கிய சவால்கள்

திருவனந்தபுரம் (எம்.சி.ஜோசபின் நகர்), ஜன. 9- அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் 13 ஆவது அகில இந்திய மாநாட்டின் மூன்றாம் நாளில் ஆறு முக்கிய ஆவணங்கள் விவாதிக்கப் பட்டன.  ‘காலநிலை மாற்றமும் பெண் களும்’ என்ற ஆய்வறிக்கை இன்றைய சூழலில் நுட்பமான-குறிப்பான கொள்கை மாற்றங்களின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. கால நிலை மாற்றத்தால் ஏற்படும் முக்கிய மான சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை வீடுகளில் விவாதிக்கவும் மகளிர் குழுக்கள் மூலம் மாதர் சங்கம் முற்பட வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. ‘தேசியக் கல்விக் கொள்கை-2020: சமத்துவத்திற்கான பெண்களின் போராட்டத்திற்கு ஒரு பின்னடைவு’ என்ற ஆய்வறிக்கை, பெண்ணிய விரோத தேசியக் கல்விக் கொள்கை யையும், அரசமைப்பு விழுமியங்களை யும் சிதைக்கும் அதன் ஆணாதிக்கக்  கண்ணோட்டத்தை அம்பலப்படுத்து கிறது.

இந்த ஆய்வில், முன்பள்ளிக் கல்வி, ஐசிடிஎஸ், பள்ளிக் கல்வி, உயர்கல்வி உட்பட கல்வித்துறையில் பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நடை முறை கோரிக்கைகளை மாதர் சங்கத்தின் முன் வைக்கிறது. இடது சாரி அரசியலால் முன்வைக்கப்பட்ட கல்விச் சிந்தனைகளை தெளிவு படுத்துவதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. எந்தவொரு நாட்டின் வளர்ச்சி க்கும் பாலின சமத்துவமின்மையைக் களைவது மிகவும் முக்கியமானது என்ற கருத்தை ‘பெண்கள் உரிமைகள்’ என்ற ஆவணம் முன்வைக்கிறது. கருக்கலைப்பு தொடர்பான பாலியல் தேர்வு தடைச் சட்டம் (PCPNDT), பெண் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் கல்விக்கான உரிமை, பெண் குழந்தைகளுக்கான நலத் திட்டங்களுக்கு சிறப்பு கவனம் மற்றும் பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு, குழந்தை திருமணம், பெண் குழந்தை கடத்தல் போன்றவற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த ஆய்வு ஆவணம்  பரிந்துரைக்கிறது.

‘இந்தியாவில் பெண்கள் இயக்கம் மற்றும் சுதந்திரப் போராட்டம்’ என்ற ஆணையத்தின் அறிக்கை, இடதுசாரி பெண்கள் இயக்கங்களின் வரலாறு- அதன் பரிணாம வளர்ச்சி- நாட்டின் சுதந்திரப் போராட்டம்- ‘ஜனநாயகம், சமத்துவம், பெண் விடுதலை’ என்ற மாதர் சங்கத்தின் முழக்கங்களை வடி வமைப்பதில் அவற்றின் தாக்கம் பற்றி  விரிவாக விவாதிக்கிறது. விடுதலைப் போராட்டத்திலிருந்து அந்த அமைப்பு பெற வேண்டிய படிப்பினைகள் பற்றிய விளக்கத்துடன் முடிவடைகிறது. மனிதாபிமானமற்ற இந்துத்வா தேசம் திணிக்கப்படுவதற்கு எதிராக அனைத்துப் பிரிவு பெண்களையும் ஒன்றிணைக்க வேண்டிய அவசரத் தேவையை ‘பெண்களின் உரிமைகள் மற்றும் ஒற்றுமையின் தேவை’ என்ற ஆவணம் சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பாக, மாதர் சங்கத்திற்குள் உள்ள இடதுசாரி இயக்கங்கள் தீவிர தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன. பெண்களின் உரிமை களுக்கான போராட்டத்திற்கும் அழிவு கரமான சாதி அமைப்புக்கு எதிரான இயக்கங்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இந்த ஆவணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

‘வேலையின்மை மற்றும் பெண்கள்’ என்ற தலைப்பில் ஆறாவது ஆவணம், கோவிட் முழுஅடைப்பு காரணமாக வேலை இழப்புகள் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை சீர்குலைப்பதன் மூலம்  நாட்டின் தற்போதைய வேலையின்மை நிலையை விவரிக்கிறது. இந்த நிலைமைக்கு தற்போதைய பாஜக அரசின் கொள்கைகள்தான் காரணம் என்று இடதுசாரிகள் எப்போதும் கூறி வருகின்றனர். அனைத்துப் பணிகளி லும் பெண்களைப் பணியாளராகப் பதிவு செய்தல், சம வேலைக்கு சம  ஊதியம், கிராமப்புற வேலை உறு தித்திட்டம் நீட்டிப்பு, சமூகப் பாதுகாப்பு, ஊதிய விடுப்பு, அனைத்துப் பெண்  தொழிலாளர்களுக்கும் பேறுகால  உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கை களை மாதர் சங்கம் இந்த ஆவணத்தில் வலியுறுத்தியுள்ளது.