சென்னை,ஜூன் 24- சனாதனத்திற்கு எதிரான வள்ளலாரின் சித்தாந்தத்தை திரித்துக்கூறிய தமிழக ஆளு நர் ரவியின் சனாதன வெறிப்பேச்சுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழு கூட்டம் ஜுன் 24 தர்மபுரியில் மாநி லத் தலைவர் த. செல்லக்கண்ணு தலைமை யில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ், மாநிலப் பொருளா ளர் இ.மோகனா, துணைப் பொதுச் செயலா ளர்கள் பி.சுகந்தி, ப.செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என்.ரவியின் சனாதனப் பேச்சைக் கண்டித்து கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி வடலூரில் நடைபெற்ற திருவருட் பிரகாச வள்ளலாரின் 200வது பிறந்த நாள் விழாவில் பேசும் போது “பத்தாயிரம் ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என்று கூறியுள்ளார். இதை விட வள்ளலாரின் பாதையை, சித்தாந்தத்தை திரிப்ப தும், சிதைப்பதும் வேறொன்றும் இருக்க இய லாது. இது அறியாமையின் வெளிப்பாடு அல்ல; இந்துத்துவா கருத்தியலை தமிழ் மண்ணில் திணிப்பதற்காக வரலாற்றை திரிப்பது, முற் போக்கு நகர்வுகளை எல்லாம் பின்னுக்கு இழுப் பது, சமூகத்தின் முன்னத்தி ஏர்களாக திகழ்ந்த ஆளுமைகளை, தார்மீக விழுமியங்கள் எதுவு மின்றி விழுங்க முனைவது என்ற விரிந்த திட்டத் தின் ஒரு பகுதியே ஆளுநரின் கூற்று. சாதிக் கட்டமைப்பே சனாதன தர்மத்தின் உயிர். பிறப் பால் ஏற்றத்தாழ்வு போதித்த இத்தகைய சனா தன தர்மத்திற்கு எதிராகவே வள்ளலாரின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் அமைந்தது. ‘தோல் வருணம் கண்டு மேல் வருணம் அறிவாரில்லை’
‘”சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானத் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே”’ ‘நால்வருணம், ஆசிரமம், ஆசாரம் முதலான நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே’ இவை எல்லாம் வள்ளலார் வார்த்தைகள்.
ஆர்.என். ரவி அவர்களே ! இதை எல்லாம் உங்களுக்கு மொழி பெயர்த்துத் தந்தவர்கள் தவறாக செய்து விட்டார்கள் என்று நாங்கள் கருதவில்லை. உங்கள் நோக்கமே தவறாக இருந்தது என்பதே உண்மை. ஆனால் வடலூ ருக்கே போய் “வள்ளலார் சனாதனத்தின் உச்ச நட்சத்திரம்” என்று பேச முடிகிறது என்பதுதான் உங்கள் சனாதன வெறியின் உச்சம். சமஸ்கிரு தம் எல்லா மொழிகளின் தாய் என்று சங்கராச்சாரி யார் பேசிய போது அதற்கு கடுமையான எதிர் வினை ஆற்றியவர் வள்ளலார். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார், குஜராத்தில் இரத்தக் களரியை உருவாக்கியவர்களுடன், வெறுப்பை அரசியல் மூலதனமாகக் கொண்டு செயல்படுபவர்களுடன், உனாவில் தலித்து களை கட்டி வைத்து தாக்கி உடம்பெல்லாம் ரண மாக்கியவர்களுடன் எப்படி ஒரு நேர் கோட்டில் இணைய முடியும்! ஆர். என்.ரவி அவர்களே! உங்களுக்கு வள்ளலார் வார்த்தைகளையே பதிலாகத் தருகிறோம்.
“கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக!” தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் சனா தன ஆணவத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. சனா தன வலையில் தமிழ்நாட்டை வீழ்த்த முனைகிற சதிகளுக்கு எதிராகக் களம் இறங்குமாறும், கருத்தியல் களத்தில் எதிர்கொள்ளுமாறும் அனைத்து இடதுசாரி, ஜனநாயக, அம்பேத்கரிய, பெரியாரிய, சமூக நீதி, மனித உரிமை இயக் கங்களை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.