states

பஞ்சு இறக்குமதிக்கான வரி விதிப்பை முற்றாக கைவிடுக! சீரழியும் ஜவுளித்தொழிலை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்க!

ஒன்றிய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

சென்னை, டிச.24- இந்தியாவில் சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமா னோருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதோடு, உள்நாட்டு பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வரும் ஜவுளித்துறை ஒன்றிய பாஜக அரசின் வரி விதிப்பால் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. ஜவுளி உற்பத்திக்கு தேவையான பருத்தி சாகுபடி இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருவதால் உற்பத்தி யாளர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சை நம்பியே உள்ளனர். அண்மைக்காலமாக வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை ரூபாய் ஒரு லட்சத்தை தொட்டது. இந்நிலையில் உள்நாட்டு ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க முடியாது என அனைத்துத் தரப்பினரும் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு கடந்த அக்டோபர் 31 வரையில் இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கான வரியை தற்காலிகமாக ரத்து செய்திருந்தது ஒன்றிய அரசு. இதனால் ஒரு கேண்டி பஞ்சின் சிலை ரூ. 67,000 ஆக உள்ளது. இந்த விலையை மேலும் குறைப்பதற்கான நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும் என ஜவுளித்துறையினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் இதற்கு மேலும் பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை ரத்து செய்ய முடியாது என அறிவித்ததோடு, இனிமேல் இறக்குமதிக்கு 11 சதவிகிதம் வரி விதிக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.

பாஜக அரசின் இத்தகைய அறிவிப்பானது ஜவுளித் தொழிலை மேலும் கடுமையான நெருக்கடிக்கு தள்ளுவதோடு, பெருமள விலான வேலையிழப்புகளையும் உருவாக்கும். இந்த தொழிலை நம்பி பணிபுரியும் பல லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் வேலையிழந்து வருவதோடு, உற்பத்தியாளர்களும் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜவுளித் தொழில் ஏராளமான நெருக்கடியை சந்தித்து வருகிறது. மறுசுழற்சி ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பின் ஆர்.டி.எப். தலைவர் ஜெயபால் அவர்கள், “தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் மற்றும் கழிவு பஞ்சு நூற்பாலைகளில் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் வெளி நாட்டு பஞ்சுக்கும், இந்தியாவின் பஞ்சுக்கும் ஒரு கேண்டிக்கு ரூ. 12,000/- வரை வித்தியாசம் உள்ளது. இந்நிலையில் இந்திய ஜவுளித் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களுடன் எப்படி போட்டி போட முடியும்?” என்று கேள்வியெழுப்புகிறார். எனவே, ஜவுளித் தொழிலின் தற்போதைய நெருக்கடி, வேலைவாய்ப்பு, உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு பாஜக அரசு பஞ்சு இறக்குமதிக்கு விதித்துள்ள 11 சதவிகித வரியை முழுமையாக தள்ளுபடி செய்வதோடு, ஜவுளித் தொழிலை பாதுகாப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.