கடலூர்,ஜூன்.4- நிலம் கையகப்படுத்த படுவதை நிறுத்திவிட்டு மாற்று வழியில் மின் உற்பத்திக்கு நெய்வேலி என்எல்சி நிறுவனம் முயற்சிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். இது குறித்து கம்மாபுரத்தில் சனிக் கிழமை ( ஜூன் 4) செய்தியாளர்களிடம் அவர் கூறியது: என்எல்சி நிறுவன முதலாவது மற்றும் இரண்டாவது சுரங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான விவசாயி கள் தங்களது நிலங்களை வழங்கி யுள்ளார். இந்த விவசாயிகளுக்கு என்எல்சி நிர்வாகம் கொடுத்த வாக் குறுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை. கொடுத்த சிறு நிவாரண தொகையை கூட ஒரே தவணையில் கொடுக்காமல் பல தவணைகளில் கொடுத்து அந்தப் பணம் பயனற்ற தாக போய்விட்டது. நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர மான வேலை வழங்க வேண்டும் என்று உடன்படிக்கை இருந்தாலும், தகுதி உள்ளவர்களுக்கு கூட வேலை வழங்க நிர்வாகம் மறுக்கிறது. அவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக சேர்க்கி றோம், பின்னர் படிப்படியாக சொசைட்டியில் இணைக்கிறோம், பின்னர் நிரந்தரம் செய்கிறோம் என்று உறுதியளித்தனர். நிலம் கொடுத்த தொழிலாளர்களில் இதுவரை எத்தனைப்பேர் நிரந்தரம் செய்யப் பட்டுள்ளார்கள் என்பதை நிர்வாகத் தால் சொல்லமுடியுமா?
மறுசீரமைப்பு என்ற பெயரில் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. ஆண்டுக்கு ரூ.1,400 கோடி வரை லாபம் ஈட்டும் நிறுவனம், இந்த தொழிற்சாலை அமைப்பதற்கு அடிப்படையாக இருந்த விவசாயி களை வஞ்சிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியும் பலகட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால் இதுவரை பிரச்சனைக்கு நிரவாகம் நிரந்தர தீர்வு காணவில்லை. இந்த நிலையில்தான் என்எல்சி நிறுவ னம் புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு நிலம் எடுப்பதற்கான பணியை துவங்கி உள்ளது. விவசாயிகளை பொறுத்தவரை யில் என்எல்சி நிர்வாகத்திற்கு நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக சொல்கின்றனர். ஏற்கனவே நிலம் கொடுத்தவர்கள் ஏமா்ந்து நடு வீதியில் நிற்பதைப் போல நாங்களும் நடுவீதியில் நிற்க்க முடியாது என்று அவர்கள் தெரிவித்துவிட்டனர். 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மூன்று போகமும் விளையக்கூடிய நல்ல நீர் பாசனவசதி உள்ள நிலங்கள் ஆகும். இந்த நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று கிராம மக்கள் உறுதி யாக போராடி வருகின்றனர். என்எல்சி நிர்வாகம் சொல்வதை போல் சொல்லி விட்டு, நிலத்தை எடுத்துக் கொண்டு கையை விரித்து விடுவார்கள் என்று விவசாயிகளுக்கு அவ நம்பிக்கை வந்து விட்டது. தொடர்ந்து நெய்வேலி நிறுவனம் விரிவாக்கம் என்ற பெயரில் பல்லா யிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திக் கொண்டே சென்றால் தமிழக வரைபடத்தில் கட லூர் மாவட்டம் காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது. கடலூர் மாவட்ட மக்கள் மற்ற மாவட்டங்களுக்கு அகதிகளாக போய் குடியேற கூடிய சூழல் உள்ளது உள்ளது.
மின்சார உற்பத்திக்கு மாற்று ஏற்பாட்டை ஒன்றிய மாநில அரசுகள் யோசிக்க வேண்டும். விவசாயி களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய பிறகு வேண்டுமானால் நிலத்தை எடுத்துக் கொள்ளலாமே தவிர வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து விட்டு நிலத்தை எடுத்துக் கொள்ள அனு மதிக்க முடியாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். இன்று கமாபுரத்தில் நடைபெறு வது தொடக்கநிலை ஆர்ப்பாட்டம் மட்டுமே. மாவட்டம் முழுவதும் உள்ள மக்களை திரட்டி வலுவான போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள் ளோம். இவ்ளவு பெரிய நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கி றது. சமீபத்தில் பயிற்சிக்கு 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர் அதில் 3 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி வடமாநிலங்களில் செலவிடப்படு கிறது. வட மாநிலத்தில் இருப்பவருக்கு வேலை கொடுக்கப்படுகிறது, நிலத்தை மட்டும் இங்கே கொடுக்க வேண்டுமா? என்ற கேள்வி வருகிறது.
என்எல்சி நிறுவனத்தில் செயல் பாடு குறித்து பொது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும், இதில் தமிழக அரசு தலையிட வேண்டும். நெய்வேலிக்கு நிலம் கொடுத்த காரணத்தால் மட்டுமே இந்த பகுதி மக்கள் மிகப் பெரிய இழப்பைச் சந்தித் துக் கொண்டுள்ளனர். தினந்தோறும் பல ஆயிரம் கன அடி கேலன் தண்ணீரை வெளியேற்றி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் 700 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. 40 கிலோ மீட்டர் வரை கடல் நீர் உள்ளே புகுந்து விட்டது. கம்மாபுரம் ஒன்றியத்தில் 52 ஊராட்சி களில் தண்ணீர் பஞ்சம் வந்து விட்ட தாக தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் அனல் மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அந்த வழியில் நெய்வேலியில் மாற்று வழியில் மின் உற்பத்தியை துவங்குவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் மாதவன், மாநில க்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.