சென்னை, ஏப். 12- புள்ளிஇயல் விதிமுறை களை மீறி பணி மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அரசு விதிமுறைகளின் படி இடமாறுதல் வழங்க வேண்டும், திட்டப் பணிகளின் தன்மையை பாதிக்கும் வகை யில் தொழில்நுட்ப பணி யிடங்களை ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு புள்ளிஇயல் சார் நிலை அலுவலர் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளா கத்தில் செவ்வாயன்று (ஏப். 12) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் ப.அந்துவன் சேரல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பொ.கண்ணதாசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஞான தம்பி, மாநிலச் செயலாளர் டேனியல் ஜெயசிங், பகுதி நிர்வாகிகள் செந்தில்குமார், மணிமாலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொருளாளர் இரா.சிவக்குமார் நன்றி கூறினார். இதில் அமைப்புச் செயலாளர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாநில நிர்வாகிகள் ச.முரளிதரன், கி.நாராயணன், சே. ராதாகிருஷ்ணன், கா.பால்பாண்டி, தா. முகிலன், ப.செந்தமிழ் சேரன், சி.நடராஜன் உள்ளிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அந்துவன் சேரல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தினசரி பணியிட மாறுதல் ஆணையரால் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் ஊழியர்கள் மன உளைச்ச லுக்கு ஆளாகின்றனர். எனவே அரசாணைப்படி பணி மாறுதல் செய்ய வேண்டும், விதிகளை மீறி பணி மாற்றம் செய்வதை கைவிட வேண்டும். தொழில்நுட்ப பணியாளர்களின் 52 பணியிடங்களை எவ்வித காரணமும் இன்றி ஒப்படைக்கக்கும் முயற்சியை கைவிட வேண்டும். நூற்றுக் கணக்கான காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே சங்க நிர்வாகிகள் ஆணையர் கருணாகரனை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் இனி நான் பணியிட மாறு தல் செய்ய மாட்டேன் என உத்தரவாதம் அளித்துள்ளதாகவும், பிற கோரிக்கைகள் குறித்து படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்துள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்டமாக உண்ணாநிலை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தனர்.