states

சுங்கக் கட்டண உயர்வைக் கைவிடுக!

சென்னை, மார்ச் 13- ஏப்ரல் 1 முதல் 5-10 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்தும் ஒன்றிய அரசின் முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடி களில் சுங்கக் கட்டணத்தை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடுமையான விலைவாசி உயர்வு, வேலை யின்மையால் சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் சொல்லொணா துயரங் களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த சுங்கக் கட்டண உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை களும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வணிகர்கள், வாகன உரிமை யாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்துப் பகுதி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசு அமைத்துள்ள சாலையில், தனியார் நிறுவனங்கள் மக்களிடம் பணம் வசூலிக்க சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் காலாவதி யான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு ஜனநாயக இயக்கங்களும்,  பொது மக்களும் தொடர்ந்து போராடி வந்த நிலை யில், இவற்றை அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசும் சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒன்றிய பாஜக அரசு கிடப்பில் போட்டுள்ளது. 

60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காலா வதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு பொதுமக்களிடம் கொள்ளை யடித்து வருகின்றன. சுங்கச் சாவடிகள் சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகள்  எதுவும் மேற்கொள்ளப்படுவது இல்லை. சட்ட விதிகள் எதையும் முறையாக கடை பிடிக்கப்படுவதில்லை. இதை தடுக்க வேண்டிய ஒன்றிய அரசு சுங்கச்சாவடி உரிமையாளர்களோடு கை கோர்த்துக் கொண்டு கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஒன்றிய அரசு உத்தேசித்துள்ள  சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் காலாவதியாகியுள்ள 32 சுங்கச் சாவடிகளையும், 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாக இருக்கும் சுங்கச் சாவடிகளையும், நகர்ப்புறத்தில் இயங்கும் சுங்கச் சாவடி களையும் உடனடியாக அகற்றிட வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.