states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நிபா வைரசுக்கு சிறுவன் பலி

மலப்புரம் பாண்டிக்காடு பள்ளிப்பாடியில் அம்பலப்பம்பன் அப்துல் லத்தீப்,  தில்ஷாத் தம்பதியின் மகன் அஷ்மில் டேனிஷ் (14) நிபா  வைரஸ் தாக்குதலுக்கு உள்ளா னார்.  கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜுலை 21 ஞாயிறன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிபாவால் உயிரிழந்த சிறு வனின் உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள் ளார். சிறுவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தோடு, அந்த குடும்பத்தாரின் துய ரில் தானும் பங்கு கொள்வதாக வும் அவர் தெரிவித்துள்ளார்

கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி ஆம் ஆத்மி குற்றம்சாட்டு

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக திகார் சிறை யில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளதாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநிலங்கள வை எம்.பி.யுமான சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப் பில் அவர் மேலும் கூறுகையில், “பாஜக வும், தில்லி துணைநிலை ஆளுநரான  சக்சேனாவும் கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து அடிக்கடி தவறான தகவல் களைத் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். சர்க்கரையின் அளவு அதிகரித்ததால் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவைப்பட்டது. ஆனால் கெஜ்ரிவால் மாம்பழம், பூரி உள்ளிட்ட மாவு பொருட்களை அதிகமாக உண்டு கலோரிகளை அதிகப்படுத்துகிறார் என்று தெரிவித்து, இன்சுலின் கொடுக்க மறுத்துவிட்டனர். நீதிமன்ற தலையிட்ட தால் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கிடைத் தது. எந்த ஒரு நபரும் தனக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தும் கண்டதை சாப்பிட்டு, தன் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்ப மாட்டர்கள். அதனால் சிறையில் கெஜ்ரிவாலை கொல்ல சதி செய்வதாக தெரிகிறது. ஒரு நோயாளி யின்/நபரின் மருத்துவ அறிக்கைகளை மறைப்பது, அந்த நபருக்கு தீங்கு விளை விக்கும் சதியாகும். இந்த சதியில் ஈடுபட்ட வர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்களுடன் ஆலோ சித்து வருகிறோம். கூடிய விரைவில் தில்லியின் துணைநிலை ஆளுநர் மற்றும் பாஜகவுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வோம்” எனக் கூறினார்.

மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம் நாடாளுமன்றம்  இன்று கூடுகிறது

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் திங்களன்று (ஜூலை 22)  தொடங்குகிறது. ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ள கூட்டத் தொடரில் ஜூலை 23 (நாளை)ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  இந்த கூட்டத் தொடரில் 6 புதிய மசோதா க்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குரூப் 2 தேர்வுக்கு 7. 9 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, ஜூலை 21- தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2, 2ஏ பணிகள் அடங் கிய 2,327 காலிப் பணியிடங் களுக்கான போட்டித் தேர்வு க்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். குரூப் 2  பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு ஒரு  பணியிடத்திற்கு 340 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த தேர்வுக்கு விண் ணப்பம் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 20 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.  செப்டம்பரில் தேர்வு குரூப்2, 2ஏ பணியிடங் களுக்கான முதல் நிலைத் தேர்வுகள் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள் ளது. குரூப் 2  தேர்வின் மூலம் 507 காலி பணியிடங்கள், குரூப் 2ஏ தேர்வின் மூலம் 1,820 பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளன. இந்த நிலையில், குருப்  2 மற்றும் 2 ஏ ஆகிய பதவிக் கான பணியிடங்களுக்கு மொத்தம் 7 லட்சத்து 90 ஆயி ரத்து 376 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

ஜூலை 27 வரை மிதமான  மழைக்கு வாய்ப்பு

சென்னை,ஜூலை 21- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங் களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 23 ஆம் தேதி முதல் 27 ஆம்  தேதி வரை லேசானது முதல்  மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 25 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகு திகள் மற்றும் குமரிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ  மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் அறிவுறுத்தியுள்ளது.

“தென்பெண்ணை நதிநீர் ஆணையம்  அமைப்பதில் அரசு உறுதி”

வேலூர்,ஜூலை 21- அரக்கோணம் காட்பாடி அருகே கிளித்தான்பட்டறை பகுதியில் ஜூலை 21 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக நீர்வ ளத் துறை அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களி டம் கூறியதாவது:  தென்பென்னை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுக்க தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டிருந்தது. தமிழக அரசு ஆணையம் அமைப்பதில் உறுதியாக உள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக கர் நாடகத்துடன் தமிழகம் சுமார் 50 முறை பேசிவிட்டது. இவ் வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர் பணியிட தேர்வை 26 ஆயிரம் பேர் எழுதினர்

சென்னை, ஜூலை 21- தமிழ்நாடு அரசு தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றுவதற்கு 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மேலும் கூடுதலாக ஆயிரம் பணி யிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இவர் களுக்கான போட்டித் தேர்வு ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 21) நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) தெரி வித்திருந்தது. இந்த தேர்வுக்கு 26 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர் களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு கொள் குறிவகை முறையில் ஜூலை 21நடைபெற்றது. தகுதித் தேர்வு ஒன்றில் (தமிழ் மொழி தாள் தேர்வு) 50 மதிப்பெண்களுக்கு 30 கேள்விகள் கேட்கப்படும். இதில் குறை ந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெறு பவர்களின் இரண்டாம் தகுதித் தேர்வுக் கான விடைத்தாள் மட்டும் திருத்தப்படும். பகுதி இரண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,உருது, ஆங்கி லம், கணிதம், அறிவியல், சமூக அறி வியல் ஆகிய பாடங்களில், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட குறிப்பிட்ட ஐந்து  மொழிப் பாடங்களில் ஏதேனும் ஒன்று, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை சேர்த்து மொத்தம் ஐந்து பாடங்களிலிருந்து 150 மதிப் பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடை பெற்றது. இதில் 150 கேள்விகள் கேட்கப் பட்டன. போட்டித்தேர்வில் பெறும் மதிப் பெண்ணுடன் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்தி ருக்கும் ஆண்டுகளுக்கேற்ப அரசால் வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப் பெண்கள் சேர்த்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் சான்றி தழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.

லேபர் கட்சிக்கு எதிராக போராட்டம் 

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நிறுத்த வலியுறுத்தி  இங்கிலாந்தில் மக்கள் போராட்டம் எழுந்துள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பி வரும் நடவடிக்கையை புதிதாக அமைந்துள்ள லேபர் கட்சி அரசு நிறுத்த வேண்டும் என இங்கிலாந்து மக்களும் பாலஸ்தீன ஆதரவு அமைப்புகளும் நாடாளு மன்றத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

நேதன்யாகு ஒரு பயங்கரவாதி; பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை பயங்கரவாதி என  பாகிஸ்தான்  பிரதமர் ஷேபாஸ்  ஷெரிப் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனர்களுக்கு எதிரான போர்க் குற்றங்களுக்காக அவரை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். பாகிஸ்தானில் இருந்து இஸ்ரேலுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவக்கூடிய அல்லது பாலஸ்தீனர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களைச் செய்ய உதவும் நிறுவனங்களை தடை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்தில் ரூ.167 கோடி தங்கம் கடத்தல்
பாஜக பிரமுகருக்கு சம்மன் அனுப்ப சுங்கத்துறை திட்டம்

சென்னை, ஜூலை 21- சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் கடையை மையமாக வைத்து கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடிமதிப்பிலான 267 கிலோ தங்கத்தை கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில்பாஜக பிரமுகர் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது. வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவோரிடம் இருந்து தங்கத்தை பெற்று, சுங்க சோதனை இல்லாமல் கடத்தியது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், சபீர் அலி உள்பட 9 பேர் கைதான நிலை யில், பாஜக நிர்வாகி பிருத்வி என்பவ ருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சபீர் அலி கடை நடத்து வதற்கு விமான நிலைய ஆணை யத்திற்கு பிருத்வி பிரந்துரை செய்த தாக தகவல் வெளியாகியுள்ளது.

காசிமேட்டில் மீன் விலை சற்று குறைந்தது

சென்னை, ஜூலை 21- காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கட லுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100  விசைப்படகுகள் ஞாயிறன்று கரை திரும் பின. இதனால் மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால் உள்ளிட்ட மீன்கள் அதிகமாக குவிந்து விற்பனை செய்யப்பட்டது. இறால், கடமா, நண்டுகள் வரத்து சற்று குறைவா கவே இருந்தது. மேலும், கொடுவா மீன்கள் வரத்து இல்லை. தற்போது ஆடி மாதம் என்ப தால் ஏராளமானோர் அம்மனுக்கு கூழ் ஊற்று வார்கள். இதனால் மீன்கள் வாங்க பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழு வதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கடந்த வாரத்தை விட சங்கரா மீன்கள் வரத்து  அதிகமாக இருந்தால் ரூ.200-க்கு விற்கப் பட்டது. அதேபோல் வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலையும் குறைந்து விற்கப்பட்டதால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி யுடன் வாங்கி சென்றனர்.