states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி

ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக இசு தான் காத்வி அறிவிக்கப்பட்டுள் ளார். குஜராத் மாநிலத்திற்கு கோபால் இத்தாலியா, இசுதான் காத்வி, மனோஜ் சொராதியா உள்ளிட்டோரின் பெயர்களை முன் மொழிந்த ஆம் ஆத்மி கட்சி, இவர்களில் தங்களுக்கு விருப்ப மானவர்களை மக்களே பரிந்து ரைக்கலாம் என்று கூறியது. 6357000360 என்ற மொபைல் எண்ணை வெளியிட்டு, வாட்ஸ்ஆப்  மெசேஜ் மூலமோ, வாய்ஸ் மெசேஜ்  மூலமோ தெரிவிக்கலாம் என அறி வித்தது. இந்நிலையில், இந்த  வாக்கெடுப்பில் இசுதான் காத்வி 73  சதவிகித வாக்குகளை பெற்ற தால், அவரை குஜராத் முதல்வர் வேட்பாளராக ஆத் ஆத்மி கட்சி  தேர்வு செய்திருப்பதாக, அதன் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரி வால் அறிவித்துள்ளார்.

‘காற்று மாசு குறித்து அரசுத் துறைகளுக்கு கவலை இல்லை’

“தில்லி காற்று மாசுபாட்டி னால் இதயம், நுரையீரல் பிரச்ச னைகளால் மக்கள் அவதிப்பட்டு  வருகின்றனர். இந்த நோயாளி களால் மருத்துவமனைகள் நிரம்பி  வழிகின்றன. ஆனால், இவ்வளவு  பெரிய பிரச்சனையை மக்களோ,  அரசோ தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று பாஜக  எம்.பி. வருண் காந்தி சாடியுள்ளார்.  மேலும், “தில்லி மற்றும் சுற்றுவட்டா ரங்களில் 10-இல் 8 குழந்தை களுக்கு சுவாசப் பிரச்சனைகள் உள்ளன. பல ஆண்டுகளாக ஆலோசனை நடத்தியும், இந்த பிரச்சனையை தீர்ப்பதில் அரசின்  பல்வேறு துறைகளுக்கு இடையே  ஒருங்கிணைப்போ, கவலையோ இல்லாதது ஏன்?” என்றும் அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

தென் மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை,நவ.4- தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நவ.5 அன்று  தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று  சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரி செந்தாமரைக்கண்ணன் கூறி யுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்க ளில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. நவ.6 அன்று செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். 7, 8 ஆகிய தேதிகளில் தமிழ கத்தில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர் மழைக்கு  23 பேர் உயிரிழப்பு;  101 வீடுகள் சேதம்

சென்னை,நவ.4- தமிழ்நாட்டில் பெய்து வரும் வட கிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் இதுவரைக்கும் 38 மாவட்டங்களில் 14.52 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் மட்டும் மிக அதிக மழை (55.96 மி.மீ) பெய்துள்ளது.  வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் இதுவரைக்கும் மொத்தம் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. 18 கால்நடை இறந்துள்ளன. 101 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. 191  நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3 நிவாரண மையங்களில் 120 நபர்கள் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மழை  நீர் தேங்கியுள்ளதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 25,000  உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள் ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு  ரூ.12 அதிகரிப்பு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மேலாண்மை  இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  ஆவின் பால் கொள்முதல் விலையை தொடர்ந்து, நவம்பர் 5 முதல்  பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 32-லிருந்து, ரூ. 35 ஆகவும், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 41-லிருந்து ரூ. 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும்  கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.  இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்க ளின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்ற மின்றி தற்போதைய நிலையே தொடரும்.  தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்ற மின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ. 46-க்கே புதுப்பிக்கப்படும். சில்லரை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை (ஆரஞ்சு நிறம்) லிட்டர் ஒன்றுக்கு ரூ. 60 மாற்றி அமைக்கப்படுகிறது.  இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக  ஈடுசெய்யும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு

சென்னை, நவ.4- சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளியன்று (நவ.4) பால்வளத்துறை அமைச்சர் நாசர்  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஆவினில் பால் கொள்முதல் விலையை, பசும்பால் லிட்டருக்கு  ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.41-லிருந்து ரூ.44-ஆகவும் உயர்த்தப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழக முதல்வர் உயர்த்தியிருக்கிறார்”என்றார். பால் விலையேற்றம் சாதாரண மக்களுக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. முழுக்க முழுக்க வாணிப நோக்கத்தோடு விற்பனை  செய்யப்படுகிற ஆரஞ்சு நிற பாக்கெட் பாலுக்கான விலை மட்டும்தான் உயர்த்தப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார். இதற்குமுன்பு ரூ.48-க்கு விற்பனை செய்து வந்தோம், இதே நிறை கொழுப்பு பாலை மற்ற மாநிலங்களிலும், மற்ற தனியார் நிறுவனங்க ளும் ஏறக்குறைய ரூ.70-வரை விற்பனை செய்கின்றனர். பாஜக ஆளுகின்ற குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும்  விலையைவிட ரூ.10 குறைவாக, அதாவது ரூ.60-க்கும் விற்பனை செய்யப் படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை ஏற்கெனவே 11 லட்சம் பேர்  வாங்கி வருகின்றனர். இந்த பாலை சந்தா அட்டைகளைப் பயன்படுத்தி  வாங்குபவர்களுக்கு அதே விலைதான், அதில் எந்த மாற்றமும் கிடையாது.  அவர்களுக்கு இந்த பால் ரூ.48-க்கும், வணிக பயன்பாட்டிற்காக வாங்கு பவர்களுக்கு மட்டும் ரூ.60-க்கும் விற்பனை செய்கிறோம் எனவும் அமைச்சர்  விளக்கம் அளித்தார்.