சென்னை,ஏப்.30 நாகையில் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:- நாகை மாவட்டம் திருச்செங் காட்டாங்குடியில் நடை பெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது திருக்கண்ண புரத்தை சேர்ந்த தீபராஜ் அதிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தபோது சப்பரம் ஏறியதால் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தா ருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐந்து லட்சம் உடனடியாக முதல மைச்சரின் பொது நிவாரண நிதி யிலிருந்து நிதியுதவி வழங்க உத்த ரவிட்டுள்ளேன் இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.