அமெரிக்காவை மைய மாக கொண்டுள்ள எட்டெக் ஸ்டார்ட் அப் நிறு வனம் தனது மொத்த ஊழியர்களில் 70% பேரை பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் செய்தது மட்டு மல்லாமல் ஊழியர் களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை யும் வழங்க மறுத்துவிட் டது. எட்டெக் நிறுவனத் தில் மொத்தம் 433 ஊழி யர்கள் உள்ளனர். இவர் களில் 300-க்கும் அதிக மானோரை பணிநீக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியர் சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங் கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
நாட்டில் கடந்த ஓராண்டு (2022) மட்டும் ரயில் மோதி 1,856 பேர் பலி யாகியுள்ளனர். இதில் 210 பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்றும், தற்கொலை செய்து கொண்டவர்களில் 85% ஆண்கள் என ரயில்வே தெரிவித்துள்ளது.
உலகச் செய்திகள்
ஏப்ரல் 30 ஆம் தேதியன்று தென் அமெரிக்க நாடான பராகுவேயின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது. சுமார் 48 லட்சம் பேர் வாக்களிப்பார்கள். ஜனாதிபதியோடு, துணை ஜனாதிபதி, ஆளுநர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் வாரிய உறுப்பினர்களையும் மக்கள் தேர்வு செய்வார்கள். புதிய ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் மொத்தம் 13 வேட்பாளர் போட்டியிடுகிறார்கள் என்று பராகுவே நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதியான ஜெனினில் இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஆயுதந்தாங்கிய பாலஸ்தீன பாதுகாப்புக்குழுவிற்கும் இடையில் சண்டை நடந்துள்ளது. ஜெனின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் சோதனை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியபோதுதான் இந்த மோதல் ஏற்பட்டது. தங்கள் சோதனையை நிறுத்தி விட்டு, பின்வாங்க வேண்டிய கட்டாயம் இஸ்ரேல் ராணுவத்திற்கு ஏற்பட்டது.
கடந்த 33 நாட்களாக மழைப் பொழிவு இல்லாமல் பிரான்ஸ் இருந்திருக்கிறது. ஜனவரி 21 ஆம் தேதியில் இருந்து இதுவரையில் ஒரு மில்லி மீட்டருக்கும் கீழேதான் மழை பெய்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் கடுமையான வறட்சியைச் சந்தித்த பிரான்ஸ், அதன் பாதிப்புகளில் இருந்து இன்னும் மீளவில்லை. இது வரை அளவிடப்பட்டதில், ஜனவரி 2023 தான் பிரான்ஸ் வரலாற்றில் அதிக வெப்பம் இருந்த மூன்று மாதங்களில் ஒன்றாகும்.