states

குடிமனை மற்றும் மனைப்பட்டா : சிறப்புத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்

தமிழ்நாட்டில் குடிமனை மற்றும் குடிமனைப் பட்டா கோரி காத்திருப்போரின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2006-ஆம் ஆண்டில் விவசாய அரங்கம் சார்பில் நடத்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலக குடியேற்றப் போராட்டத்தின் விளைவாக, அன்றைய திமுக அரசு வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி 5  லட்சம் மனைப்பட்டாக்களை வழங்கியது. கடந்த ஆட்சிக் காலத்தில் சில லட்சம் மனைப்பட்டாக்களும், தற்போதைய ஆட்சியில் இதுவரை 6 லட்சம் மனைப்பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. தற்போதைய சவால்கள் வீட்டுமனைப் பட்டா வழங்க தற்போது தமிழ்நாடு அரசு சில அரசாணைகளை வெளியிட்டிருந்தாலும், மனைப்பட்டா கோரி காத்திருப்போருக்கு அவை போது மானதாக இல்லை. நீதிமன்ற உத்தரவுகளைக் கார ணம் காட்டி, நீர்நிலை புறம்போக்கு இடங்களில் வசிப்போரை மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை பல மாவட்டங் களில் வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வரு கின்றனர்.  இந்நடவடிக்கையால் பலர் வீடற்றவர்களாக நிர்க்கதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகள் 1. குடியிருப்பவர்களுக்கு மாற்று இடமும், மறு வாழ்விற்கான உரிய நிவாரணமும் வழங்காமல், நீர்நிலை புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் வசிப் போரை அப்புறப்படுத்தக் கூடாது. 2. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றி செயல்படுத்தியதைப் போல, வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தை மீண்டும் செயல் படுத்த வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது தமிழ் நாடு மாநில மாநாடு மேற்கண்ட கோரிக்கைகளை வலி யுறுத்துகிறது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.