* அரசு மற்றும் மக்கள் மீது சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு இறையாண்மை மிக்க நிதி ஒழுங்குமுறைக் கொள்கை உருவாக்கப்படும். தேசிய வருமானத்துடன் ஒப்பிடுகையில் மொத்த நிதிப் பொறுப்புக்களைக் குறைப்பதற்கான கொள்கைகளைத் தயாரித்தல்.
* இருதரப்பு மாற்று வரி (பிஎஸ்எல்) மற்றும் பிற அதிநவீன நுட்பங்கள் மூலம் டாலர் அல்லாத வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல்; பிரிக்ஸ், ஷாங் காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) போன்ற பிராந்திய குழுக்களிடையே நிதி ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்.
* கிரிப்டோகரன்சிகள் மீது வலுவான மற்றும் விரிவான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்.
* முழு மூலதனக் கணக்கு மாற்றத்தை நோக்கிய மாற்றத்தை திருத்தியமைத்தல்; நிதி மூலதனத்தின் உள்ளீடு மற்றும் வெளியீடு மீதான கட்டுப்பாடுகளை மீண்டும் நிறுவுதல்.
* வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) பங்கேற்பு பத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தல்; அதிகப்படியான ஆபத்து ஏற்படுத்துகின்ற ஊக நிதி சார்ந்த செயல்பாடுகளை மட்டுப்படுத்துதல்.
* ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மற்றும் தன் னாட்சி அதிகாரத்தைப் பாதுகாத்தல்; ரிசர்வ் வங்கியின் ஆளுகை மற்றும் ஒழுங்குமுறை வழிமுறைகளை வலுப்படுத்துதல்.
* புதிய தனியார் வங்கி உரிமங்கள் வழங்குவதை நிறுத்துவது, வங்கிகள் ஒழுங்குமுறை (திருத்தம்) சட்டம் 2012 ஐ மறுபரிசீலனை செய்வது, வெளிநாட்டு வங்கிகள் இந்திய வங்கிகளை கையகப்படுத்துவதைத் தடுப்பது.
* பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்துதல்; பொதுத்துறை வங்கி தனியார்மயமாக்கல் இல்லை; பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்குகளைக் குறைக்க வங்கிச் சட்டங் களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை ரத்துசெய்தல்; முன்னுரிமைத் துறை வகைப்பாட்டின் கீழ் தனியார் வங்கிகள் உள்ளிட்ட வங்கிகளின் இடர்நேர்வுகளைக் குறைப்பதற்காக செயல்திறன்மிக்க மூலதன ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துதல்.
* பெரிய அளவில் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதத்தை அதிகரித்தல்; சிறு கடன் களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தல்; சேமிப்பு கணக்குகள் மற்றும் சில்லறை வைப்பு
களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தல், சாதாரண சில்லறை மற்றும் நிதி உள்ளடக்கிய நிதிசார் வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டணங்களை தள்ளுபடி செய்தல்.
* பினாமி சொத்துக்கள் உள்ளிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதன் மூலம் வங்கிகளின் வராக்கடன் கள் அனைத்தையும் (என்.பி.ஏ) மீட்டெடுப்பது;
வேண்டுமென்றே தவறிழைத்தவர்களைத் தண்டிக்கவும், வசூலிக்கவும் குற்றவியல் சட்டங்களைத் திருத்துவது; நொடிப்பு மற்றும் திவால் சட்டத்தை திரும்பப் பெறுதல்.
* டிஜிட்டல் சார் தரவுகள் மீதான இறையாண்மையைப் பராமரிக்கும் அதே வேளையில், நிதிசார் தொழில்நுட்பத் துறையில் அமேசான், பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தை ஒழுங்குபடுத்துதல்.
* நுண்கடன் பெறுவோர் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க தனியார் நுண்நிதி நிறுவனங் கள் மீது கடுமையான ஒழுங்குமுறைகளை அமல்படுத்துதல். தனியார் நுண்நிதி நிறு
வனங்களுக்கு பொதுத்துறை வங்கி நிதியுதவி அளிப்பதை நிறுத்துதல்; வணிகம் சார்ந்த நிறுவனங்களை வங்கிகளிலிருந்து பிரித்தல்.
* மண்டல ஊரக வங்கிகள் (திருத்த) சட்டம் 2015 -ஐ ரத்து செய்தல்.
* கூட்டுறவுச் சங்கங்களை மீண்டும் மாநில அரசுகளின் வரம்புக்கு உட்பட்ட ஒன்றாக மாற்றுதல்; ‘வங்கி ஒழுங்குமுறை-1949 திருத்தச் சட்டம், 2020’ - ஐ ரத்து செய்தல்; இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் வைப்புத் தொகைகளை வசூலிக்க தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களுக்கு அனுமதி அளித் தல்; கந்து வட்டிக் கடனின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற கூட்டுறவு வங்கிகளை வலுப் படுத்துதல்; கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளித்தல்.
* அபிவிருத்தி நிதி நிறுவனங்களை (DFIs) வணிக வங்கிகளிலிருந்து பிரித்தல்; சராசரி நபரின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதில் வங்கித் துறை கவனம் செலுத்தும்.
* எல்.ஐ.சி.யில் உள்ள அரசு பங்குகளை இனி நீர்த்துப்போகச் செய்யக் கூடாது; ஆயுள் காப்பீடு, மருத்துவம் மற்றும் பொது காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டி நீக்கம்; பொதுத்துறையில் உள்ள பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல்.
* வரி ஏய்ப்பு புகலிடங்களுக்கு சட்டவிரோதமாக மூலதனம் செல்வதை தடை செய்வது; நியாயமான வரிவிதிப்பை உறுதி செய்வதற் காக இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தங்களில் உள்ள ஓட்டைகளை அடைத்தல்.
* வைப்புத்தொகைகளைப் பாதுகாக்கவும், பொன்சி திட்ட உரிமையாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும், பாதிக்கப்பட்ட வைப்புத்தொகையாளர் களுக்கு இழப்பீடு வழங்கவும் சீட்டு நிதி சட்டத்தை வலுப்படுத்துதல்.
* நிதித்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) கட்டுப்படுத்துதல்.