சென்னை, ஜூன் 11- போலி ஆவணங்கள் மூலம் ரூ.4 கோடி நிலத்தை அபகரித்த பாஜக முக்கிய நிர்வாகிகளான கே.ஆர்.வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் பாஜக மாவட்டச் செயலாளர் நரேஷ் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சுல்தான் (52). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட பாடிய நல்லூர் பகுதியில் 23.5 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு 10 பேர் நிலத்தை விற்பனை செய்து கொடுக்கும்படி நிலத்திற்கான பவர் கொடுத்தனர். அதன் ன்படி நான் இந்த இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறேன். இதற்கிடையே நிலத்தை விற்பனை செய்ய முயன்ற போது, அந்த இடம் பாடியநல்லூர் பகுதி யை சேர்ந்த பாஜக பிரமுகர் கே.ஆர். வெங்கடேசன், அவரது ஆதரவாள ரான திருவள்ளூர் ஆர்.ஜி.என், கால னியைச் சேர்ந்த பாஜக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நரேஷ்(38), மற்றும் நரேஷின் தந்தை பிரதீப் குமார் (63) ஆகியோர் பெயரில் இருப்பது தெரிய வந்தது. எனவே ரூ.4 கோடி மதிப்புள்ள இடத்தை இந்த மோசடி நபர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த புகாரின் மீது விசாரணை நடத்த ஆவடி ஆணையர் அருண், மத்திய குற்றப்பிரிவு காவல்துறை யினருக்கு உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நில மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், பாஜக பிரமுகரான கே.ஆர்.வெங்கடேசன் தனது செல்வாக்கை பயன்படுத்தி தனது ஆதரவாளரான பாஜக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் நரேஷ் மற்றும் அவரது தந்தை பெயரில் மோசடியாக ஆவணங்களை உருவாக்கி நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. மேலும், பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்கடே சன் பிரபல செம்மரம் கடத்தல் வியா பாரியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது. கே.ஆர்.வெங்கடேசன் வெளி நாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தி விற்பனை செய்ததாக இவர் மீது, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 53 வழக்கு கள் இருப்பதும், சில நாட்களுக்கு முன்பு ஆந்திரா காவல்துறை செம்ம ரம் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை செங்குன்றம் பகுதியில் துப்பாக்கி முனையில் கே.ஆர்.வெங்க டேசனை கைது செய்ததும் தெரிய வந்தது.
ஆந்திரா காவல்துறை வெங்கடேச னை கைது செய்ததால் அவருக்கு வழங் கப்பட்ட மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளர் பதவி மட்டும் பறிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அவர் பாஜக பிரமுகராகவே உள்ளார். எனவே, தனது அதிகாரத்தை பயன் படுத்தி தொழிலதிபர் சுல்தானுக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள 25.3 சென்ட் நிலத்தை தனது ஆதர வாளர் நரேஷ் மற்றும் அவரது தந்தை பிரதிப் குமார் பெயரில் மாற்றி மோசடி செய்தது உறுதியானது. போலி ஆவணங்கள் பறிமுதல் இதைத்தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்து, வெள்ளியன்று இரவு கே.ஆர்.வெங்க டேசன், திருவள்ளூர் பாஜக மாவட்ட செயலாளர் நரேஷ், நரேஷின் தந்தை பிரதீப் குமார் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணம் தயாரிக்க பயன்படு த்திய பொருட்கள் மற்றும் ஆவணங் கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுமக்கள் புகார்
பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்க டேசன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆவடி காவல் ஆணை யரகத்தில் புகார் அளித்து வருகின்ற னர். அவரிடம் நடத்திய விசாரணை யில், இதுபோல் பலரிடம் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அப கரித்து இருப்பதும் தெரிய வந்துள் ளது. எனவே, கைது செய்யப்பட்ட கே. ஆர்.வெங்கடேசனை 5 நாள் காவ லில் எடுத்து விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை யினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்த நாளில் நடைபெற்றுள்ள இந்த கைது சம்பவம் பாஜக தலைவர்கள் மற்றும் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.