states

கரும்பு ஆலை தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு தீ வைப்பு

பள்ளிபாளையம், மே 14- பரமத்திவேலூர் அருகே கரும்பு ஆலை தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்த நிலையில், 3 வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர், வடகரை, ஆத்தூர் சரளைமேடு, ராஜீவ் காந்தி காலனிச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர்  கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். ஆலையில் பணி யாற்றி வரும் ஏராளமான வடமாநில தொழி லாளர்கள், ஆலை வளாகத்தில் உள்ள ஆஸ்ட்பெஸ்ட்டாஸ் குடியிருப்பில் தங்கி யுள்ளனர். இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலையில் ஆஸ்பெஸ்ட்டாஸ் கொட்டகைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர். இதனால் கொட்டைகைக்குள் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது தீப்பிடித்தது.

இதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராக்கி (24), சத்தீஸ்கர்  மாநிலத்தைச் சேர்ந்த சுக்கிராம், எஸ்வந்த் ஆகிய மூன்று பேருக்கும் பலத்த தீக்கா யம் ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்காக கரூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இச்சம்பவம் தொடர்பாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், கோவை சரக துணைத்தலைவர் விஜயகுமார், நாமக்கல் காவல் கண்காணிப் பாளர் கலைச்செல்வன், ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சசிகுமார், சேலம் காவல்  கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் மேற்பார்வையில், 3 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்ற வாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மண்டல டிஐஜி விஜயகுமார் ஆலை கொட்டைகையை பார்வையிட்டு, அங்குள்ள வட மாநில தொழிலாளிகளிடம் இந்த தீ வைப்பு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில்,   கொட்டகைக்குள், அடையாளம் தெரியாத நபர்கள் துணியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்து, தூக்கி வீசியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.