states

குடும்ப வறுமையால் டிராக்டர் ஓட்டும் பட்டதாரி பெண்

திருவண்ணாமலை,ஜூலை 1- திருவண்ணாமலையில் குடும்ப வறுமை காரணமாக மனம் தளராமல் டிராக்டர் ஓட்டி சம்பாதிக்கும் பட்டதாரி பெண்ணுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், மணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த  ஏழுமலை-வேடியம்மாள் தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஏழுமலை ஓட்டு நராகவும், வேடியம்மாள் விவசாய கூலித் தொழில் செய்து வரும் நிலையில் தங்கள் பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையில் மகன் ராஜியை  பாலிடெக்னிக்கல்லூரியில் டிப்ளமோ படிப்பும் மகள் கலைச்செல்வியை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இளங்கலை கணிதமும் படிக்க வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கலை முடித்த கலைச்செல்வி மற்றும் அவரது சகோதரர் ராஜி ஆகியோர் குடும்ப வறுமை காரணமாக  மேல் படிப்பை தொடர முடியாமல் வீட்டில் முடங்கினர். பெற்றோரின் துயரத்தை போக்க ராஜி நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை  செய்து வரும் நிலையில் கலைச் செல்வியும் தனது அப்பா மற்றும் அண்ணனை போல் ஓட்டுநராக பயிற்சி மேற்கொண்டு ஆட்டோ வாங்கி  ஓட்டினார். ஆனால் அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. மேலும் ஆட்டோ வாங்குவதற்குவாங்கிய கடனை அடைக்க முடியாமல் போனதால் சிரமப்பட்ட அவர் ஆட்டோவை விற்று  விட்டு துணிச்சலாக விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் ஏர் உழுதல் உள்ளிட்ட விவசாய பணிகளை  செய்து வருமானம் ஈட்டி வருகிறார். டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திரம் பணிகள் இல்லாத போது பிறவேலை செய்து வரும் கலைச் செல்வி கல்லூரி மேற்படிப்பை தொடர  வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறியுள்ளார். கல்லூரி படிப்பை தொடர விரும்பும் பட்டதாரிக்கு அரசு,  தன்னார்வலர்கள் உதவி செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்க ளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.