கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்
கிருஷ்ணகிரி, ஏப். 21- தூத்துக்குடியில் இருந்து உரம் ஏற்றிக் கொண்டு 42 பெட்டிகளுடன் ( 21 பெட்டிகள் உரமும், 21 பெட்டி களில் காலி) சரக்கு ரயில் கர்நாடக மாநி லம் பெங்களூரு நோக்கி வியாழ னன்று மாலை புறப்பட்டது. மதுரை, திருச்சி, சேலம், தருமபுரி வழியாக பெங்களூரு செல்வதாக இருந்த நிலையில், வெள்ளியன்று அதிகாலை 2 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உடையாண்ட அள்ளியில் திடீ ரென்று 6 பெட்டிகள் (3-வது பெட்டி முதல் 8-வது பெட்டி வரை) தடம் புரண்டன. அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள், உடனடியாக ரயில்வே அலு வலர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சேலம், தருமபுரி, பெங்களூருவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ரயில் பணியாளர்கள் நிகழ்விடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மாற்றுப் பாதையில் ரயில்கள்
தருமபுரி - ஓசூர் வழித்தட பயணி கள் ரயில்கள் நிறுத்தப்பட்டு, மாற்றுப் பாதையில் ரயில் இயக்கப்படுகிறது. சேலம் - யஸ்வந்த்பூர் ரயில் (16212) முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கோவை - லோக்மானியா திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு குப்பம், பங்கா ருப்பேட்டை, மாலூர், கிருஷ்ணராஜ புரம் வழியாக மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (12677) பெங்களூருவில் இருந்து சேல த்திற்கு திருப்பத்தூர் வழியாகவும், பெங்களூரு - காரைக்கால் ரயில் (16529) திருப்பத்தூர் வழியாக செல்கிறது. நாகர்கோவில் - பெங்களூரு ரயில் (17236) சேலத்தில் இருந்து திருப்பத்தூர், ஜோலார் பேட்டை கிருஷ்ணராஜபுரம் வழி யாக செல்கிறது. இந்த ரயில்கள் தருமபுரி, ஓசூர் ரயில் நிலையங் களுக்கு செல்லாது என்றும் கூறப்பட்டு ள்ளது. முக்கியமாக சரக்கு ரயில் தடம்புரண்டதால் தருமபுரி, ஓசூர் ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டதால் நாள்தோறும் பெங்களூரு நகருக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
கூடங்குளம் 1-ஆவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
திருநெல்வேலி, ஏப். 21- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கூடங்குளம் 1-ஆவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் 1,000 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் 1-ஆவது அணு உலையில் 1.000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை மாலை அந்த அணு உலையில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த உணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த அணு உலையில் பழுதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.அதே நேரத்தில் 2-ஆவது அணுஉலையில் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதுதவிர மேலும் 4 அணுஉலைகள் கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வேங்கைவயல் சம்பவம் இருவரிடம் குரல் மாதிரி பரிசோதனை
புதுக்கோட்டை, ஏப்.21- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த இருவரிடம் குரல் மாதிரி பரி சோதனை சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டிய லின குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிச. 26ஆம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம் வெளியே தெரியவந்த தொடக்கக் காலத்தில் இதே பகுதியைச் சேர்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்ட கட்செவி அஞ்சல் குழுவில் இருவர் இச்சம்பவம் குறித்து குரல் பதிவை வெளியிட்டுள்ளனர். தற்போது அவர்களின் குரல் பதிவை உறுதி செய்யும் வகையில், குறிப்பிட்ட அந்த இருவரிடமும் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி காவல்துறையினர் முடிவு செய்து, இதற்கான அனுமதியை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் பெற்றனர். இதன் தொடர்ச்சியாக காவல்துறையில் பணி யாற்றும் ஒருவர் உள்பட இருவரையும் சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமை யிலான காவல்துறையினர் வெள்ளிக்கிழமை சென்னை அழைத்துச் சென்றனர். அங்கு, தடய அறிவியல் பரிசோதனை மையத்தில் இருவரிடமும் குரல் மாதிரி எடுக்கப்பட்டது. அதன் பிறகு அனைவரும் புதுக்கோட்டை திரும்பியது குறிப்பி டத்தக்கது.
சட்டப்பேரவை ஒத்திவைப்பு
சென்னை, ஏப்.21- தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த மாதம் 20 ஆம் தேதி கூடியது. அன்றைய தினம் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. இதையடுத்து, நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கூட்டத் தொடரின் இறுதி நாளான ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், அதன்படி, தமிழ்நாடு கூட்டத்தொடர் வெள்ளியன்று (ஏப்.21) நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஒத்தி வைத்தார்.
சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை
சென்னை,ஏப்.21- தமிழ்நாடு சட்டப்பேரவை வெள்ளியன்று (ஏப்.21) கூடியதும் நேர மில்லா நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜூ, தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பர சன், “தமிழ்நாட்டில் 400 தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. வருடம் ஒன்றிற்கு 50 மில்லி யன் அமெரிக்க டாலர் அளவிற்கு விற்பனையாகிறது.விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங் களில் 5 லட்சம் தொழிலாளர்கள் இந்த தொழிலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் லைட்டரால் தீப்பெட்டி தொழில் பாதித்துள்ளது. குறைந்த விலையில் 20 தீப்பெட்டி உடைய அளவில் இந்த லைட்டர் வந்துள்ளதால் மொத்தமாக 20 விழுக் காட்டிற்கு ஆக்கிரமித்துள்ளது. இது குறித்து கடந்த செப்டம்பர் மாதத்தில் முதலமைச்சர் ஒன்றிய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்பொழுது குஜராத் நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு அடிப்படையில் கூடுதல் உத்தரவுகள் கொடுக்கப்பட்டிருக்கி றது. தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்வதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்”என்றார்.
ரூ. 60.58 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
சென்னை,ஏப்.21- சென்னை விமான நிலையத்தில் ரூ. 60.58 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1,128 கிராம் தங்கத்தை துபாயிலிருந்து கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
ஐஐடி வளாகத்தில் மாணவர் தற்கொலை
சென்னை,ஏப்.21- சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் பி.டெக். 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் கேதார் சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காவல் நிலையம்
சென்னை,ஏப்.21- வண்டலூர் அருகே கிளாம் பாக்கத்தில் விரைவில் பேருந்து நிலையம் திறக்கப்படுவதையொட்டி அங்கு காவல் நிலையம் அமைக்கப் படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசுகையில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: அங்கு பேருந்து நிலையம் விரை வில் திறக்கப்படுவதையொட்டி இந்த காவல் நிலையம் அமைக்கப்படு கிறது. வானகரம், மேடவாக்கம், அம்பத்தூர், புதூர் ஆகிய இடங்க ளில் 3 புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சென்னை பெருநகர காவல் துறையிலுள்ள பாதுகாப்பு பிரிவுக்கு வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் புதிய கருவி கள் வழங்கப்படும். சென்னை மாநகரில் 2 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும். சென்னையில் 10 ஆண்டுக ளுக்கு மேலாக உள்ள 57 போக்கு வரத்து சிக்னல்கள் மாற்றப்படும். சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், தீய ணைப்பு கருவிகள் நிறுவப்படும். சென்னை மத்திய குற்றப்பிரிவில் புலனாய்வு அதிகாரிகளுக்கு 40 மடிக்கணினிகள் வாங்கப்படும் என்றார்.
வேங்கை வயல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை: முதல்வர்
சென்னை, ஏப்.21- வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அரசு மிக துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ள தாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் வியாழனன்று (ஏப்.20) கேள்வி எழுப்பப்பட்டது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத் தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி இது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வேங்கைவயல் கிராமத்தில் நடை பெற்ற நிகழ்வு தொடர்பான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த, மாநிலக் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டது. வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அந்தக் கிராமத்தில் தீண்டாமையை ஒழிக்க, அனைத்து தரப்பு மக்களி டையே அமைதியை நிலைநாட்ட, இந்த அரசு மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. அந்த வகையில், இப்போது நியமிக்கப்பட்டிருக்கும், ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு இந்த அரசு அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு ஓர் அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் கூறினார்.
இடதுசாரிக் கொள்கைகளுக்கு ஆதரவு
மெக்சிகோ சிட்டி, ஏப்.21- இடதுசாரிக் கொள்கைகளை முன்னி றுத்தி மெக்சிகோவின் ஜனாதிபதியாகப் பணியாற்றி வரும் ஆம்லோ(ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார்) மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றி ருக்கிறார் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கப் பகுதிகளில் பல்வேறு நாடுகளில் இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்திய தலைவர்கள் ஜனாதி பதியாகத் தேர்வு செய்யப்பட்டு வரு கிறார்கள். அதில் மெக்சிகோவும் ஒன்றா கும். அனைத்து இடதுசாரித் தலைவர் களைப் போலவே, ஆம்லோவும் நாட்டின் இயற்கை வளங்களை அரசின் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதே வேளையில், அதை சட்டப்பூர்வமாகவும், மக்களின் ஆதரவோடும் செய்து வருகிறார். மெக்சிகோ மக்கள் மத்தியில் அவ ருக்குள்ள ஆதரவு அதிகரித்துள்ளது. நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட 75 நகரங்களில் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு வினாக்களைத் தொடுத்து பூஜ்ஜி யம் முதல் பத்து என்ற அளவுகோலை வைத்து ஆம்லோவின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள். பூஜ்ஜியம் என்றால் சுத்தமாக நம்பிக்கை இல்லை என்றும், பத்து என்றால் முழு மையாக நம்புவதாக அர்த்தம் என்றும் வைத்திருக்கிறார்கள். 50.9 விழுக்காட்டினர் 8 முதல் 10 புள்ளி களைக் கொடுத்திருக்கிறார்கள். 16.9 விழுக்காட்டினர் 6 முதல் 7 புள்ளிகளைத் தந்துள்ளனர். 14.1 விழுக்காட்டினர் 4 முதல் 5 புள்ளிகளும், 17.6 விழுக்காட்டி னர் 0 முதல் 3 புள்ளிகள் வரையில் கொடு த்துள்ளனர். முழுமையான நம்பிக்கை உள்ளவர்களே 50 விழுக்காட்டுக்கு மேல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க தாகும். தேசிய புள்ளியியல் மற்றும் புவி யியல் மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
கர்நாடக சட்டசபை தேர்தல்: அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு
பெங்களூரு, ஏப்.21- கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடை பெற உள்ள நிலையில், தற்போது வேட்புமனுத்தாக்கல் நிகழ்வு நடை பெற்று வருகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாள ராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என எடப்பாடி தரப்பு அறிவித்தது. எடப்பாடி அறிவிப்புக்கு போட்டியாக அதே புலிகேசி நகர் தொகுதியிலும், கோலார் தங்க வயல் தொகுதியிலும் வேட்பாளர்களை அறிவித்தார் ஓபிஎஸ். இந்நிலையில் வெள்ளியன்று அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப் பட்டுள்ளது. மேலும் கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப் பட்டுள்ளது. அதிமுக பொதுச்செய லாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், அதிமுக வேட்பாளர் மனு ஏற்கப்பட்டுள்ளது. வேட்பு மனு படி வத்தை முறையாக பூர்த்தி செய்யாத தால் மனுவை நிராகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரி வித்துள்ளது. புலிகேசி தொகுதியில் களமிறங்கும் டி.அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.