states

காற்றழுத்த தாழ்வு தீவிர புயலாக மாறுகிறது

சென்னை, அக். 21 - மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது. மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து  வலுவடைந்து மத்திய கிழக்கு வங்கக்கட லில் நிலை கொண்டுள்ள இந்த காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதி, அக்டோபர் 22-இல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்.23-இல் மேலும் வலுப்பெற்று புய லாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படு கிறது. அவ்வாறு புயலாக மாறும் பட்சத்தில் கத்தார் நாடு பரிந்துரைத்த ‘டானா’ என்ற பெயர் சூட்டப்படும்.  இந்தப் புயல், அக்டோபர் 25 அன்று அதிகாலை ஒடிசாவின் பூரி – சாகர் தீவு களுக்கு இடையே தீவிர புயலாக கரை யைக் கடக்கக் கூடும். கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் வங்கக்கடலில் உரு வாகும் முதல் புயல் இது என்பது குறிப்பிடத் தக்கது.  எனினும் இந்த புயல் தமிழக கடற்கரைப் பகுதியை விட்டு விலகி ஒடிசா  மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டி வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, செவ்வாய்க்கிழமையன்று (அக்.22) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.