சென்னை, நவ. 28- வேகமாக இருசக்கர வானகம் ஓட்டுபவர்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கும் வகையில் விதி களை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு வில், சமீபகாலமாக இருசக்கர வாக னங்களில் சாகசங்கள் செய்து, அதை சமூக வலைதளங்களில் பதி வேற்றம் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களின்படி கடந்த 5 ஆண்டு களில் வேகமாக இருசக்கர வாகன ங்களை இயக்கியது, வாகனங்க ளின் வடிவத்தையும், சைலன்சர் களை மாற்றியும் இயக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கணிசமான அளவுக்கு அதிகரித் துள்ளது. அதுபோல வாகனங்களை வேகமாக இயக்குவது வாகன ஓட்டி களுக்கு மட்டுமல்லாமல், பாதசாரி களுக்கும், பிற வாகன ஓட்டுநர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. முறையாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதி பெறாமல் வாகனங்களில் மாற்றங்கள் செய்து இயக்குவது விபத்துக்களுக்கு வழி வகுக்கிறது. இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பை மாற்றி, அபாய கரமான வகையில் இயக்குவதை தடுக்கவும், வேகமாக வாகனங்கள் ஓட்டுவோருக்கு எதிராக நட வடிக்கை எடுக்கும் வகையில் உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரி யிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் விசார ணைக்கு வந்தது. வழக்கை விசா ரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.