குஜராத் கடலோரப்பகுதி யில் ரூ.300 கோடி மதிப் புள்ள 40 கிலோ போதைப் பொருளுடன் படகு ஒன்றை இந்திய கடலோர காவல்படை யினர் சிறைபிடித்தனர். படகில் போதைப்பொருள் மட்டுமல்லாது ஆயுதங் கள், வெடிமருந்துகள் இருந்ததாகவும், படகில் இருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வும் கடலோர காவல் படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா முன்னெச் சரிக்கை பணிகளை துரிதப்படுத்தவும், அடுத்த 6 மாதத்திற்கு தேவையான பரிசோத னை கருவிகள், முகக்கவ சம், பிபிஇ (PPE) உடை கள் ஆகியவற்றை கையிருப்பு வைக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வா ழ்வுத்துறை உத்தர விட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறு வனங்களில் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ள விவ காரம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பு தற் கொலை அல்ல; கொலை எனவும், கழுத்து உள்ளி ட்ட சில இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வு செய்த மருத்துவர் ரூப்குமார் ஷா அதிர்ச்சி தகவல் அறிக் கை வெளியிட்டுள்ளார். “எம்.எஸ்.தோனி” திரைப் படம் மூலம் பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத் 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார்.
தில்லி-என்சிஆர் பகுதி களில் செவ்வாயன்று முதல் பால் விலையை ரூ.2 உயர்த்தவுள்ளதாக மதர் டெய்ரி நிறுவனம் அறிவித்துள்ளது. மதர் டெய்ரி ஒரே ஆண்டில் 5-வது முறையாக பால் விலையை உயர்த்தி யுள்ளது.
டைட்டானிக் இயக்கு னர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான “அவதார் 2” திரைப் படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்தியாவில் ரூ.300 கோடி வசூலை தாண்டியுள்ளது. உலக அளவில் ரூ.7000 கோடிக் கும் அதிகமான வசூலை குவித்துள்ளது “அவதார் 2” திரைப்படம்.
பொதுக்குழுவால் ஒருங் கிணைப்பாளர் பதவியில் இருந்து தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது எனவும், கட்சி அலுவலக சாவி ஒருவரிடம் இருப்ப தால் மட்டுமே கட்சிக்கு சொந்தம் கொண்டாட முடியாது எனவும் எடப் பாடி பழனிசாமி அனுப் பிய வக்கீல் நோட்டீசுக்கு ஓ.பன்னீர் செல்வம் பதி லளித்துள்ளார்.
பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாக னம் பறிமுதல் செய்யப் படும்; 18 வயதுக்குட் பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால் அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை.
பெண்களுக்கு எதிரான தங்கள் நிலைபாட்டில் மேலும் ஒரு அறிவிப்பை ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து பணிபுரிந்து கொண்டிருக்கும் தொண்டு நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களைப் பணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தாவிட்டால் தொண்டு நிறுவனங்களுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் அவையின் மூத்த அதிகாரிகளைத் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு பர்கினோ ஃபசோ நாட்டின் அரசு ஆணையிட்டுள்ளது. 24 மணி நேரத்தில் அவர்கள் வெளியேற வேண்டும் என்று கூறியுள்ள வெளியுறவுத்துறை, வெளியேறச் சொல்வதற்கான காரணம் எதையும் கூறவில்லை. மேலும், அத்தியாவசியத் தேவையில்லாத ஊழியர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும்படியும் ஐக்கிய நாடுகள் அவைக்கு பர்கினோ ஃபசோ கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் கடுமையான குளிர் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை குலைக்கும் வகையில் சூறைக்காற்று மிகவும் பலமாக வீசிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கா வின் கிழக்குப் பகுதி மாகாணங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளன. சூறைக்காற்றால் இதுவரையில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசர நிலை உதவிகளை மேற்கொள்ளும் பிரிவுகள் சென்றடைய முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.