திருச்சிராப்பள்ளி, ஏப்.11- திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை யில், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் 7 கர்ப்பிணி பெண்கள் உட்பட 9 பேர் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை களும், கொரோனாவை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப் பட்டுள்ளது. கி.ஆ.பெ., விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் செயல்படும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில், தற் போது 42 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 330 ஆக்சிஜன் செறி வூட்டிகள் தயார் நிலையில் உள்ளன.
320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். தற் போது, திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும், 300-க்கும் அதிகமானோர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படு கின்றனர். தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டிபி சிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருந்துகளும் கை யிருப்பு உள்ளன. எனவே, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. அதை எதிர்கொள்ள, திருச்சி அரசு மருத்து வமனை தயார் நிலையில் உள்ளது என மருத்துவமனை தரப்பில் கூறப் பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 9 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப் பட்டு, அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாக டீன் நேரு கூறினார்.