- குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரி ழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய 27,000 பேர் பாதுகாப்பான இடங் களுக்கு வெளியேற்றப் பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
- குஜராத் மற்றும் இமாச் சலப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தல்களுக்கான காங்கிரஸ் பொறுப்பா ளர்களாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல் வர் பூபேஷ் பாகேல் ஆகி யோரை அக்கட்சி நிய மித்துள்ளது.
- மூக்கு சக்கரம் (NOSE WHEEL) பழுதடைந்த பிரச் சனையால்தான் மதுரை - துபாய் இடையிலான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ள னர். மூக்கு சக்கரம் பழு தடைந்த விமானம் போயிங் பி737 மேக்ஸ் (அமெரிக்கா) விமான வகையைச் சார்ந்ததாகும்.
- சிரியாவுக்கான உதவிகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகள் தரும் அழுத்தத்தால் சிரிய அரசு எதிர்ப்பு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து உணவு, மருந்துகள் மற்றும் இருப்பிட வசதிகள் செய்து தரப்படுகின்றன. தங்களுக்கு எதிரான போருக்கு உதவவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிரிய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
- செப்டம்பர் 5 ஆம் தேதியன்று புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரிஸ் ஜான்சனின் இடத்தில் யார் அமரப் போகிறார் என்ற போட்டியில் இதுவரையில் 11 பேர் குதித்திருக்கிறார்கள். போட்டியிடுபவர்களை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 20 பேர் முன்மொழிய வேண்டும். முதல் சுற்றில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர்கள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.
- மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ ஃபாசோ கலகத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த ராணுவம் அங்கு நடைபெறும் வன்முறைக் கலவரங்களை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. ஐந்து மாதங்களுக்கு முன்பாக, அங்கிருந்த ஆட்சியாளர்களை அகற்றிவிட்டு அதிகாரத்தைத் தாங்கள் கைப்பற்றி விட்டதாக ராணுவம் அறிவித்தது. ஆனால், இந்த ஐந்து மாத காலத்தில் அதற்கு முன்பு இருந்ததைவிட 23 விழுக்காடு வன்முறை அதிகரிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.