சிறப்பு மக்கள் நீதி மன்றத்தில் 45 வழக்குகளுக்கு தீர்வு
தஞ்சாவூர், மார்ச்12 - தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை சமரசமாக பேசி தீர்வுகாண தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும்நடைபெற்றது. இந்தச் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான அமர்வில் தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.சுசிலா, தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எம்.இளவரசி ஆகியோர் கொண்ட அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அமர்வுகளோடு, கும்பகோணம், மற்றும் பட்டுக்கோட்டை, ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகள் உட்பட மொத்தம் 170 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதில் 45 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு ரூ. 2 கோடியே 7 லட்சத்து 64 ஆயிரத்து 900 க்கு இழப்பீடு தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தஞ்சாவூர் மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட சங்க வழக்கறிஞர்கள். வழக்காடிகள்- பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கத்தில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த மூவர் பலி
திருச்சிராப்பள்ளி, மார்ச் 12- திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கத்தில் உள்ளது அம்மா மண்டபம். இங்கு சனிக்கிழமை இரவு மூன்று பேர் அம்மா மண்டபம் நடைபாதை யில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்துள்ள னர். இந்த நிலையில் திங்கள்கிழமை அதி காலை காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் அம்மா மண்ட பம் பகுதியில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று பேர் மீது ஏறி இறங்கி யது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலும் இரு வர் மருத்துவமனைக்கு கொண்டு செல் லப்பட்ட நிலையிலும் உயிரிழந்தனர் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். இறந்தவர்கள் யாசகர்கள் என்ப தால் அவர்கள் பற்றிய விவரம் உடனடி யாகக் கிடைக்கவில்லை.
‘ஒன்றிய பாஜக அரசால் கூட்டுறவு இயக்கம் சிதைக்கப்படுகிறது’
கடலூர், மார்ச்.12- தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. சம்மேளன மாநிலத் தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயினார் கலந்து கொண்டு கூட்டுறவு இயக்கம் சந்தித்து வரும் பிரச்சினைகளை விளக்கி பேசினார். பொதுச் செயலாளர் என்.ஆர்.ஆர். ஜீவானந்தம் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார். அரசு அறிவிப்பு செய்தவாறு பொது விநியோகத் திட்டத்தை தனித்துறை யாக துவக்க வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை அரசு உரு வாக்க வேண்டும். கூட்டுறவு சட்டவிதி 97ஐ திருத்தம் செய்ய வேண்டும். போனஸ் கூட்டுறவு சங்க ஊழியர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்தபடி வழங்க வேண்டும். கூட்டுறவு இயக்கத்தை பாது காத்திடவும், பொது விநியோகத் திட்ட த்தை பலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை
கொழும்பு, மார்ச் 12- இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் இரண்டு படகுகளை பறிமுதல் செய்து, அதிலிருந்த இந்திய மீனவர்கள் 16 பேரை ஞாயிறன்று கைது செய்தனர். இலங்கை கடற்படை தரப் பில் கூறப்படுவதாவது:- வெற்றிலைக்கேணிக்கு வட கிழக்கே, அனலைதீவு தீவிற்கு அப்பால் 16 இந்திய மீனவர்கள் மீன்பிடித் துக்கொண்டிருந்தனர். அவர்கள் இந்திய கடற்பரப்பை தாண்டி வந்து மீன்பிடித்தனர். எனவே அவர்களை கைது செய்ததோடு இரண்டு படகு களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம் மயிலிட்டி கடற்படை அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர் என தெரி விக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியா வில் எந்த மாநிலம் எந்த மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள் என்பதை இலங் கைக் கடற்படை தெரிவிக்கவில்லை.
போலி டாக்டர் பட்டம்: ஹரிஷின் வங்கி கணக்குகள் முடக்கம்
சென்னை, மார்ச் 12- அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தனி யார் அமைப்பின் நிர்வாகி ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஆடுதுறை யிலுள்ள ஹரிஷின் வங்கி கணக்கை முடக் கிய சென்னை காவலர்கள் பணப்பரி வர்த்தனை ஆய்வு செய்து வருகின்றனர். ஹரிஷின் வங்கி கணக்கில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், இது வரை 50 நபர்களுக்கு போலியாக அவர் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாகவும் தக வல்கள் வெளியாகியுள்ளன. 4 பிர பலங்களுக்கு இலவசமாக டாக்டர் பட்டம் வழங்கிவிட்டு, மீதமுள்ளவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு டாக்டர் பட்டம் வழங்கி மோசடியில் ஈடுபட்டதும், வசூல் செய்த பணத்தில், பாதியை மட்டுமே நிகழ்ச்சிக்காக செலவிட்டதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஈரான்-சவூதி உறவு புதுப்பிப்பு சீன முயற்சிக்கு வெற்றி
பெய்ஜிங், மார்ச் 12- சீனாவின் முயற்சியால் பல ஆண்டுகளாக அரசு ரீதியான தொடர்பு இல்லாமல் இருந்து ஈரான் மற்றும் சவூதி அரேபியா, இருதரப்பு உறவுகளை புதுப்பித்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையிலான உறவு மீண்டும் வளர வேண்டும் என்று சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டிருந்தது. பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருதரப்பும் பல்வேறு அம்சங்கள் கொண்ட உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இருதரப்பு தூதரக உறவைப் புதுப்பிக்கும் வகையில், தூதரங்களை மீண்டும் திறக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உடன்பாடு எட்டப்பட்டது குறித்து சீனா, ஈரான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், “தொடர்ந்து நடைபெற்ற பேச்சவார்த்தைகளின் அடிப்படையில் தூதரகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களை இரண்டு மாதங்களுக்குள் திறப்பது என்று முடிவெடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனத்தரப்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய வெளிநாட்டு விவகார ஆணையத்தின் இயக்குநர் வாங் யி பங்கேற்றார். இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள ஈரான் மற்றும் சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நேரில் சந்தித்து விவாதிக்க இருக்கிறார்கள். இரு நாடுகளும் தங்கள் இறையாண்மையை பரஸ்பரம் மதிப்பது என்றும், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது என்றும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். சீனாவின் தொடர் முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஈரானுடனான அமெரிக்காவின் எதிர்மறை அணுகுமுறையை மீறி இந்த உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
உலகச் செய்திகள்
ஜப்பானில் உள்ள கூகுள் நிறுவனம் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் ஆகியவற்றில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் உள்ள கூகுள் நிறுவனத்தில் 6 விழுக்காடு வேலைகள் வெட்டப்படும் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. வேலை வெட்டு அறிவிப்பு பெரும் கவலையை ஊழியர்கள் மத்தியில் விதைத்துள்ளதாக தொழிற்சங்கம் கூறியிருக்கிறது.
பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து துனீசியாவுக்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் பற்றி துனீசியா ஜனாதிபதி கைஸ் சயிது தெரிவித்த இனரீதியான கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவரது கருத்துக்கும், அதைத் தொடர்ந்து எழுந்த வன்முறைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கண்டறிய சுயேச்சையான விசாரணை தேவை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.
அமெரிக்காவின் 16வது பெரிய வங்கியான சிலிகான் வேலி வங்கியின் வாடிக்கையாளர்கள் பணத்தைப் பெற முடியாமல் திரும்பியிருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் மிகப்பெரிய திவால் என்று வங்கித்துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த வங்கியின் சொத்துக்களை ஒழுங்குமுறை ஆணையம் பறிமுதல் செய்திருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை திரும்பவும் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்பபடுகிறது.