states

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் 42 கிராமங்கள்

விழுப்புரம், ஜூலை 5- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10  (புதன்கிழமை) அன்று நடைபெற உள் ளது. இத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 அன்று  எண்ணப்படுகின்றன. தேர்தலுக் கான முன்னேற்பாட்டுப் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. ஜூலை 8-ஆம் தேதியுடன் (திங்கட்கிழமை) பிரச்சாரம் ஓய்கிறது. இதையொட்டி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.  இந்தியா கூட்டணியில் திமுக  வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர் கள் பிரச்சாரம் செய்து வருகின்ற னர். பாமக தரப்பில் அன்புமணி ராம தாஸ் உள்ளிட்ட பலரும் பிரச்சா ரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், பிரச்சாரம் உள்ளிட்ட  அனைத்திலும் திமுக கூட்டணியே முந்திச் செல்வது, எதிர்க்கட்சி யினரை ஆத்திரத்தில் தள்ளியுள் ளது. இதனால், பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பின்போது ஒரு சில  கிராமங்களில் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழ் நிலை ஏற்பட்டது. ஆனால், முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு கட்சியினரும் பிரச்சாரம் மேற்கொள்ளும் முக்கிய இடங் களில் போலீசார் பலத்த பாதுகாப்பு  பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த தேர்தல்களின்போது பிரச்சனை ஏற்பட்ட பகுதிகளான ஆசூர், தொரவி, பகண்டை, லட்சுமி புரம், ஒரத்தூர், சிந்தாமணி, எசாலம், பிரம்மதேசம், கொசப்பாளையம், பனையபுரம், அன்னியூர், சி.என்.பாளையம், மேல்காரணை, கடை யம், பாப்பனப்பட்டு உள்ளிட்ட 42  கிராமங்களை போலீஸ் தனது பாது காப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளது. இந்த கிராமங்களில் இரு கட்சி களும் பிரச்சாரம் மேற்கொள் ளும் சமயங்களில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பாதுகாப்புக்காக குவிக்கப் படுகின்றனர். இதற்காக விழுப்பு ரம் காகுப்பம் ஆயுதப்படை பிரிவு மற்றும் உளுந்தூர்பேட்டை பட்டா லியன், சென்னை பட்டாலியன் உள்ளிட்ட இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் வர வழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணி களில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள னர். இந்த கிராமங்களில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறை யில் பணியாற்றி வருகின்றனர்.