states

4 இளம் மருத்துவர்கள் மரணம்

சென்னை, ஜூன் 13- தமிழ்நாட்டில் நான்கு இளம் மருத்துவர்கள் இறப்புக்கு பணிச் சுமை காரணம் என்று தகவல் வெளி யான நிலையில் அதற்கு அமைச்சர்  மா.சுப்பிரமணியன் விளக்கமளித் துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவர் தனுஷ் (24), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் விஜய் சுரேஷ் கண்ணா (38) என்ற உதவிப் பேராசிரி யர் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரியின் காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ் குமார் (46),  சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையின் இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் கௌரவ் காந்தி  (41) ஆகியோர் தங்களது பணி யிடங்களிலேயே திடீரென உயிரி ழந்தனர். இளம் வயதில் அனைவரும் இதய செயலிழப்பு, நுரையீரல் செயலிழப்புக்குள்ளாகி உயிரிழந்த தாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்  துறை அமைச்சர் செய்தியாளர் களிடம் கூறுகையில்,“பணிச் சுமையால் 4 மருத்துவர்கள் இறப்பு என்பது முற்றிலும் தவறான தகவல். காலி பணியிடங்கள் நிரப்பும் பணி  தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.