states

பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு

சென்னை,டிச.20- தமிழ்நாடு அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத் திறனாளி களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிகளின் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறையின் செயலாளர் தலைமையில் உயர் மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இந்தக் குழுவில் நித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர், சட்ட விவகாரங்கள் துறை செயலாளர், மாற்றுத் திற னாளிகள் நல ஆணையர் ஆகி யோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த உயர்மட்ட குழுவானது பதவி உயர்வில் மாற்றுத் திறனாளி களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான துணைக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.