states

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 விழுக்காடு உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மே 17- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 விழுக்காடாக இருந்த அகவிலைப்படி ஏப்ரல் 1ஆம்  தேதி முதல் 42 விழுக்காடாக உயர்த்தி  வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அறிக்கையில், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற நாளி லிருந்து, கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை, கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகிய வற்றுக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறை வேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு அலுவலர் கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து  வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனி வுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்கள். அதன்படி, தற்போது 38 விழுக் காடாக உள்ள அகவிலைப்படி 42  விழுக்காடாக உயர்த்தப்பட்டு வழங்கப் படும். இதனால், சுமார் 16 லட்சம்  அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப  ஓய்வூதியதாரர்கள் பயன்பெறு வார்கள். மேலும், அரசு அலுவலர்கள் மற்றும்  ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம், உடனுக்குடன் தமிழக அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும் என அதில் கூறப்பட்டுள்ளது.