states

4,074 பேர் ஹஜ் பயணம்

சென்னை, மே 19- சென்னை சூளையிலுள்ள தமிழ் நாடு ஹஜ் இல்லத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல் பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்களுக்கான தமிழ்நாடு மாநில ஹஜ் குழு புத்தறிவுப் பயிற்சியை, அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆண்டு 4,074 ஹாஜிக்கள், சென்னையிலிருந்து விமானம் மூலம் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஜூன்  7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை  தினமும் இரு விமானங்கள், ஜூன் 11  ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை  தினமும் ஒரு விமானம் மூலம் பயணம்  மேற்கொள்வார்கள்”என்றார். நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுதின் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.