states

தீக்கதிர் விரைவு செய்திகள்

217 இடங்களுக்கு 35 ஆயிரம் பேர் போட்டி

சென்னை, ஜன.29- தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) தமிழ் நாடு முழுவதும் 15 மாவட் டங்களில்  217 காலி பணி யிடங்களுக்கு ஞாயிறன்று தேர்வு நடைபெற்றது.  தமிழ்நாடு ஒருங் கிணைந்த புள்ளியியல் சார் நிலை பணிகளில் புள்ளியி யல் உதவி ஆய்வாளர் பத வியில் 211 பேர், கணக்கா ளர்- 5, புள்ளியியல் தொகுப் பாளர் ஒருவர் ஆகிய பதவி களுக்கு நடைபெற்ற இந்த  தேர்வுக்கு    35 ஆயிரத்து  286 பேர் விண்ணப்பித்திருந் தனர். ஒரு சிலரை தவிர சுமார் 35ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை  கைவிட பாமக வலியுறுத்தல் 

சென்னை, ஜன.29 - வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட  வேண்டும் என்று பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி யுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், “என்எல்சி நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று கடலூர் மாவட்ட மக்கள் போராடி வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக வீராணம் ஏரியை சுற்றியுள்ள 12 கிராமங்களில் நிலக்கரி வளங்களை மதிப்பிடும் பணியை மத்திய சுரங்கத்துறை மேற்கொண்டு வருகிறது. உழவர்களின் வாழ்வாதாரம், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி கவலைப் படாமல் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விளைநிலங்களை பறித்து நிலக்கரி சுரங்கங்களை அமைக்க மத்திய சுரங்கத்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும் என்று கூறியுள்ளார்.   வீராணம் சுரங்கத் திட்டத்திற்காக எந்தவிதமான ஆய்வுகளையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நடத்த அனுமதிக்கக் கூடாது. இதற்காக எம்.இ.சி.எல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டுமென அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். 

பள்ளி மாணவர்களுக்கு  தொழிற்பயிற்சி: அமைச்சர் தகவல்

சென்னை, ஜன.29- சென்னை நங்கநல்லூரில் தனியார் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கலை கைவினை கண்காட்சி நடை பெற்றது.  இந்த கண்காட்சியை குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  ஞாயிறன்று தொடங்கி வைத்து பேசு கையில், மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அறிவியல் ஆய்வகங்கள், கணினி கூடங்கள் போன்ற பாடத் திட்டத்திற்கு தகுந்தார் போல் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.  திமுக அரசு, மாணவர்களின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்க ளுக்கு தொழில் பயிற்சி வழங்குவது போல், பள்ளி மாணவர்களுக்கு புத் தொழில் பயிற்சி வழங்க இருக்கிறோம்.  அரசு இதற்கான திட்டத்தை செயல் படுத்த முனைப்பு காட்டி வருகிறது என்றார் அமைச்சர்.

உத்தரகண்ட்டில் வாக்காளர் எண்ணிக்கை “கிடுகிடு உயர்வு”: விசாரணைக்கு உத்தரவு

டேராடூன், ஜன.29- உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  2022-ஆம் ஆண்டு உத்தரகண்ட் சட்டமன்றத் தேர்தலின் போது, டேராடூனைச் சேர்ந்த சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, கடந்த பத்து ஆண்டுகளில் மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து தேர்தல் ஆணையத் தரவுகளின் அடிப்படையில் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறக்கட்டளை உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவாவில் உள்ள வாக்காளர்களுடன், உத்தரகண்ட் வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்த்துள்ளது. இந்த மாநிலங்களுடன் ஒப்பிடுகையில உத்தரகண்ட் மாநிலத்தில்  வாக்காளர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் வனத்துறை அதிகாரியும், உத்தரகண்ட் ரக்ஷா மோர்ச்சா தலைவருமான டாக்டர் வி.கே.பகுகுணா, இது தொடர்பாக பிரதமர், உத்தரகண்ட்  முதல்வர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “வாக்காளர்களின் எண்ணிக்கையில் இந்த அசாதாரண அதிகரிப்பு மாநிலத்தின் கலாச்சார ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே விசாரணை நடத்த வேண்டுமெனக் கூறியிருந்தார். இதையடுத்து,  மாவட்ட அளவில், சட்டசபைத் தொகுதி அடிப்படையில், வாக்கு அளிக்கும் மையங்களின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்த நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வரவேற்றுள்ள சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் அனுப் நௌடியல் கூறுகையில், “வாக்காளர்களின் எண்ணிக்கை மிக அதிகளவிற்கு அதிகரித்துள்ள பகுதிகள் சமவெளிப்பகுதிகளாக உள்ளன.  மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளில், டேராடூன் மாவட்டத்தில் உள்ள தரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மிக அதிகளவு வாக்காளர்கள் உள்ளனர்.