நாமக்கல் மாவட்டம் ராசி புரம் அருகே கணவாய்ப் பட்டியில் இருசக்கர வாக னத்தில் வந்த 3 மாண வர்கள் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தனர். அவர்களை காப்பாற்ற 3 பேர் கிணற்றில் குதித்த னர்; இவர்களில் மொத்த 4 பேர் நீரில் முழ்கி உயிரி ழந்தனர். இருசக்கர வாக னத்தில் சென்ற 3 பேரில் 2 பேர் கிணற்றிலிருந்து மேலே வந்த நிலையில், ஒரு மாணவர் உயிரிழந் தார். மேலும் காப்பாற்ற சென்ற 3 பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
டிஸ்னியின் இஎஸ்பிஎன்-ஏர் பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள 20 உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவுள்ளதாக இஎஸ்பிஎன் தலைவர் ஜேம்ஸ் பிடாரோ தகவல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் காரும், ஜீப்பும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்த நிலையில், பலி எண் ணிக்கை உயரும் அபா யம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பேருந்து தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்ததை யடுத்து, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்து நரை போலீசார் கைது செய்துள்ளதாக அம் மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள் ளார்.
தென்மேற்கு பருவ மழை யை எதிர்கொள்ள 175 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கேரளா விற்கு விரைந்தனர்.
புதுக்கோட்டை மாவட் டம் கீரனூரில் தவணை கட்டாததால் சிறுமியை கடத்திய புகாரில் நட வடிக்கை எடுக்க அம் மாவட்ட ஆட்சியர் உத்த ரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மூலம் ரூ.3 லட்சம் கோடி மோசடி அரங்கேறி யுள்ள நிலையில், முறை கேடுகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு முறை அமலாகிறது.
ரூ.10 லட்சம் பணத்தை பறித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து மதுரை நாக மலை இன்ஸ்பெக்டர் வசந்தி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
16 மாவட்ட இளைஞர் களுக்கு ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம் பெரம்பலூரில் துவங்கி யது.
இந்திய அளவில் ஜிஎஸ்டி வருவாய் சேக ரிப்பில் சென்னை மண்ட லம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
பாஜக ஆளும் ஹரி யானா மாநிலத்தின் குரு கிராம் அரசு மருத்துவ மனையில் பிரசவ வழி யால் துடித்த இளம் பெண்ணை பிரசவ அறைக்குள் அனுமதிக்க ஊழியர்கள் மறுத்த நிலை யில், மருத்துவமனை யின் வராண்டாவில் பெண் குழந்தை பெற்றெ டுத்தார் இளம்பெண்.
உலகச் செய்திகள்
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் மோனிகா முட்ஸ் வாங்வா தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்க ளிலும் இந்தப் பாதிப்பு உள்ளதாகவும், மணிகாலாண்டு மாகாணத் தில்தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இவற்றைக் களைய பன்முகத்தன்மை கொண்ட அணுகுமுறையை அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நெகிழிப் பைகள் உற்பத்தி செய்வது ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை செய்யப்படுவதாக நியூசிலாந்து அரசு அறிவித்தி ருக்கிறது. ஏற்கனவே பல்வேறு வகையான நெகிழிப் பைகளை தடை செய்துள்ள அரசாங்கம், முழுமையான தடையை நோக்கி விரைவதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு கடைகளில் இருக்கும் நெகிழிப்பைகளும் அகற்றப்படும் என்ற உறுதியையும் அதிகாரிகள் தந்திருக்கிறார்கள்.
பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாட்டில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவ வேண்டும் என்று கம்போடி யாவின் பிரதமர் ஹன் சென் வேண்டுகோள் வைத்துள்ளார். இது பற்றிப் பேசிய அவர், “இந்த இரண்டும் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவ தோடு, வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்கவும் செய்கிறது. இந்த முதலீடுகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான வையாகும். ஆண்டுக்கு 3 லட்சம் வேலைகளை உருவாக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.