states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஒடிசா மாநிலம் பால சோர் ரயில்கள் மோதிய விபத்தில் 288 பேர் உயிரி ழப்பு என்பதே இறுதி எண்ணிக்கை என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. பிற மருத்துவமனைகள், பிணவறைகள் ஆகிய வற்றில் இருந்து தரவுகள் எடுக்கப்பட்டு கணக்கிட ப்பட்டுள்ளதாக  அம்மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா  தகவல் தெரிவித்துள் ளார்.

கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடரில் (பிரெஞ்சு) 55 ஆண்டு களுக்கு பிறகு காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற பிரேசில் வீராங்கனை என்ற பெயரை பெற்றார் மாயா. 1968இல் மரியா  பியூனோ காலிறுதி சுற்று க்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு அரபிக்கட லில் அதாவது மும்பை யில் இருந்து தென்மேற் கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அடுத்த 12 மணி நேரத்தில் புய லாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய  வானிலை ஆய்வு மையம் (IMD)  தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு “பைபர் ஜாய்” (வங்கதேசம் வைத்த பெயர்) என்று பெயரிடப்பட உள்ளது. 

தில்லி – சான்பிரான்சிஸ் கோ (அமெரிக்கா) ஏர் இந்தியா விமானம் இன்ஜின் கோளாறு கார ணமாக ரஷ்யாவில் உள்ள மகதான் நகருக்கு திருப்பி விடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 

வன்முறையால் பாதிக்கப் பட்ட மணிப்பூரில் இணையதள சேவை தடை ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

தேர்தல் ரீதியான ஒத்துழைப்புக்கான கதவை எப்போதும் திறந்தே வைத்திருப்போம் என்று ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. அரசியல் சட்டத்திற்கு ஆதரவான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தற்போதைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியமானது என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்த கட்சியின் செயற்குழுத் தலைவர் கோய்கே அகிரா, “அதிகாரத்தில் உள்ள நான்கு கட்சிகள் கூட்டணியைத் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் உடன்பாட்டை எட்ட வேண்டும்”என்று குறிப்பிட்டார்.

ஈக்குவடாரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தற்போதைய ஜனாதிபதி கில்லரமோ லஸ்ஸோ அறிவித்துள்ளார். இதுவரை செயல்பட்டதை விட இரு மடங்கு அதிகமாக செயல்படப் போவதாகவும் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் வெற்றி பெறும் நிலையில் இருந்ததால், புதிய தேர்தல்களை அவர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கட்சியில் இருந்து விலகச் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் 80க்கும் மேற்பட்ட மூத்த கட்சித் தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். சிலர் அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.