states

ஜன.26 இல் அரசியலமைப்புச் சட்ட முகவுரை உறுதியேற்பு

சென்னை, ஜன.22-  அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளை பாதுகாக்கும் வகை யில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அரசியல் அமைப்பு சட்ட முகவுரை உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாநி லத் தலைவர் எஸ். நூர்முகமது, மாநிலப் பொதுச்செயலாளர் எம். ராம கிருஷ்ணன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒன்றிய வகுப்புவாத பாஜக அரசாங்கம் அரசியலமைப்புச் சட்ட த்தின் 75 ஆவது ஆண்டு விழாவை  நாடாளுமன்றத்தில் கொண்டாடு வதாகச் சொல்லி கேலிக்குரியதாக மாற்றியது.  அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை தொடர்ந்து சிதைத்து வரும் ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பலின் செயல்களை தோலுரிக்கிற வகையிலும், அரசியல் அமைப்புச் சட்டத் தின் மாண்புகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, சோசலிசம், தனி மனிதர்களின் உரிமை கள், மக்களின் வழிபாட்டு உரிமை கள், வாழ்வுரிமை, குடியுரிமை ஆகி யவற்றை பாதுகாக்கிற அம்சங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. அந்த வகையில் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை உறுதிமொழியாக ஏற்பது என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலக் குழு முடிவு செய்துள்ளது.  எனவே பொருத்தமான இடத்தில் அரசிலமைப்புச் சட்டம் முகவுரை உறுதி ஏற்பு நிகழ்வை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.