சென்னை. மே 21- 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள் ளதையடுத்து வரும் 23ஆம் தேதி முதல் வங்கிகளில் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது. 500 ரூபாய் செல்லாது என்று அறி வித்தபோது பொதுமக்கள் கால்கடுக்க வங்கி வாசல்களில் நின்றதால் மோடி அரசின் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். அடுத்தாண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் கெட்டபெயர் ஏற்படாமல் தவிர்க்க வங்கிகளில் சிறப்பு ஏற்பாடுகளை ஒன்றிய அரசின் நிதியமைச்சக உத்தர வின் பெயரில் செய்யப்பட்டு வருகிறது. வங்கிகளில் செய்யப்பட்டு வரும் சிறப்பு ஏற்பாடு குறித்து அதிகாரி ஒருவர் கூறிய தாவது:- வருகிற 23-ந் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடை பெறுகிறது. இந்த கூட்டத்தில் என்ன செய்ய வேண்டும், வாடிக்கை யாளர்களுக்கு எப்படி வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று ஆலோ சனை செய்யப்படுகிறது. முன்பு போல கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு இல்லை. 2000 ரூபாய் நோட்டுகள் அதிக மாக அடித்தட்டு மக்களிடம் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் வங்கி களில் மற்ற பணிகள் பாதிக்காத வண்ணம் வாடிக்கையாளர்களின் வசதி க்காகவும் 2000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கு சிறப்பு கவுண்டர் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். வயதானவர்கள் வரிசையில் நின்று மாற்றாமல் அவர்களுக்கு தனி வசதி உருவாக்கப்பட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்படும். ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டு களை அதாவது 20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம். பணம் மாற்றிக் கொடுப்பதற்கு கூடுதலாக வங்கி களில் பணம் இருப்பு வைக்க அனைத்து கிளைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.